search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல்- திருச்சி அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X

    டிஎன்பிஎல்- திருச்சி அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    • டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    இன்றைய 25-வது லீக் போட்டி 7.15 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் திருச்சி- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில், தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த மதன் குமார் மற்றும் சந்தோஷ் ஷிவ் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இருவரும் முறையே 5 மற்றும் 16 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து, பாபா அபரஜித் 10 ரன்களிலும், சஞ்சய் யாதவ் 20 ரன்களிலும், ஜித்தேந்திர குமார் 13 ரன்களிலும், ஹரிஷ் குமார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    18வது ஓவரில் சிபி மற்றும் சசி தேவ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில் சிபி 31 ரன்களில் ரன் அவுட்டானார். 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.

    Next Story
    ×