search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல்: திருப்பூர் அணி வெற்றி பெற 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை
    X

    டிஎன்பிஎல்: திருப்பூர் அணி வெற்றி பெற 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை

    • துவக்க வீரர்கள் ஹரி நிசாந்த் 34 ரன்களும், சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களும் சேர்த்தனர்.
    • திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பிளே ஆப் சுற்றுக்கு சிக்கலின்றி முன்னேறுவதற்கு இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பேட்டிங் செய்த மதுரை அணி கவனமாக ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் ஹரி நிசாந்த் 34 ரன்களும், சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஆதித்யாவும் தன் பங்கிற்கு 37 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார்.

    இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×