search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல் கிரிக்கெட்"

    • நெல்லை அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது.
    • திருப்பூர் தமிழன்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி கோவை அணி 2- வது வெற்றியை பெற்றது.

    திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கோவை கிங்சுக்கு 127 ரன் இலக்காக இருந்தது.

    ஹரீஷ் குமார் அதிகபட்சமாக 20 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), சசி தேவ் 23 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். யுதீஷ்வரன் 3 விக்கெட்டும், சித்தார்த் , ஷாரூக்கான், எம்.முகமது, சுப்பிரமணியன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய கோவை கிங்ஸ் 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சாய்சுதர்ஷன் தொடர்ந்து 3- வது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 43 பந்தில் 64 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), சுரேஷ்குமார் 34 பந்தில் 47 ரன்னும் (8 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்தனர்.

    கோவை அணி 2-வது வெற்றியை பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு முதல் தோல்வி ஏற்பட்டது.

    டி.என்.பி.எல். போட்டியின் 10-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் கோவை கிங்சை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

    இன்றைய ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் 'ஹாட்ரிக்' வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    திருப்பூர் தமிழன்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. கோவை அணியுடன் 70 ரன்னிலும், சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து அந்த அணி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படு கிறது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறினர்.
    • கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கோவை பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக பந்து வீசினர். முன்னணி பேட்ஸ்மேன்கள்கூட நிலைக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார். கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது. 

    • டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இந்த சீசனில் இதுவரை மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும், 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் வீழ்த்தியிருக்கிறது.

    இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது. கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
    • கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது.

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. 16-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. 6 ஆட்டங்கள் கோவையில் நடத்தப்பட்டது.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நேற்று தொடங்கியது.

    2 ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பால்சி திருச்சியை வீழ்த்தியது. சேலம் அணி முதல் வெற்றியை பெற்றது. திருச்சி அணி 2-வது தோல்வியை தழுவியது.

    2-வது போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணிக்கு 2-வது வெற்றி கிடைத்தது. மதுரை அணி 2-வது தோல்வியை தழுவியது.

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.

    முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் (52 ரன்), 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் (7 விக்கெட்) வீழ்த்தி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது.

    கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.

    • ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    • 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

    'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும். கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.

    நேற்றைய ஓய்வுக்கு பிறகு டி.என்.பி.எல். போட்டிகள் இன்று முதல் திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சேலம் அணி திருச்சியை வீழ்த்தியது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    இதனால் மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக களமிறங்கிய எஸ்.கார்த்திக் மற்றும் ஹரி நிஷாந்த் ஆட்டத்தை தொடங்கினர்.

    எஸ்.கார்த்திக் 4 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்வர்ப்நில் சிங் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டத்தை இழந்தார்.

    தொடர்ந்து, தீபன் லிங்கேஷ் 9 ரன்களும், சுதன் கந்தீபன் பூஜ்ஜியம் ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களும், ஸ்ரீ அபிஷேக் ஒரு ரன்னும், முருகன் அஷ்வின் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    19 ஓவர்களில் தேவ் ராகுல் 14 ரன்களில் எடுத்திருந்தார். குரஜ்ப்நீத் சிங் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் ஒரு ரன்னிலேயே ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது.

    இதன்மூலம், 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.

    • கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார்.
    • 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர்.

    இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார். இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்கின.

    முதலில் பேட்டிங் செய்த ஆகாஷ் சும்ரா 10 ரன்கள் மற்றும் அமித் சத்விக் 22 ரன்களும் எடுத்தனர்.

    தொடர்ந்து, மான் பாஃனா 16 ரன்களும், மோகித் ஹரிஹரன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அபிஷேக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதி வரை விளையாடிய கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார். கடைசி பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து சேலம் அணியின் வெற்றி வாகையை சூடினார்.

    முகமது அத்னான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில், 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

    • மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார்.
    • இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

    அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர். இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்க உள்ளது.

    • 4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
    • பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அணி சமபலத்துடன் திகழ்கிறது.

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது.

    இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும்.

    கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.

    நேற்றைய ஓய்வுக்கு பிறகு டி.என்.பி.எல். போட் டிகள் இன்று முதல் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிறது. திண்டுக்கல்லில் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

    இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்ட்னஸ்-கங்கா ஸ்ரீதர் ராஜா தலைமையிலான பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப் போவது சேலமா? திருச்சியா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. மதுரை அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது 'லீக்' ஆட்டம் திண்டுக்கல்லில் நாளை (19-ந்தேதி) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சை 52 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

    நாளைய போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இருக்கிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. பிரதோஷ் ரஞ்சன்பால், பாபா-அபராஜித், சஞ்சய் யாதவ், கேப்டன் ஜெகதீசன், ஹரீஸ்குமார், ரகீல்ஷா போன்ற சிறந்த வீரர்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் உள்ளனர்.

    கோவை கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் திருப் பூர் தமிழன்சை 70 ரன்னில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் கடைசி பந்தில் தோற்றது. அந்த அணி 2-வது வெற்றி வேட்கையில் இருந்தது.

    கோவை அணியில் சாய் சுதர்ஷன், கேப்டன் ஷாருக்கான் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். சாய் சுதர்ஷன் 2 ஆட்டத்தில் 2 அரைசதத்துடன் 176 ரன்கள் எடுத்துள்ளார்.

    • மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
    • ஆட்டத்தின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் 13.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றிப்பெற்றது.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் கேப்டன் ஹரி நிசாந்த் களமிறங்கினர். கார்த்திக் ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபன் லீங்கேஷ் 6 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து நிசாந்த்- வாஷிங்டன் சுந்தர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த சுந்தர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிசாந்த் அரை சதம் கடந்தார்.

    இவர் 64 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் முறையில் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் பொய்யாமொழி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    தொடர்ந்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, அருண் கார்த்திக் 32 ரன்களும், ஸ்ரீ நிரஞ்சன் 15 ரன்களும், குருசுவாமி அஜிதேஷ் 14 ரன்களும், சோனு யாதவ் 13 ரன்களும், எஸ்ஜே அருண் குமார் 11 ரன்களும் எடுத்தனர்.

    இதில், நிதிஷ் ராஜகோபால் மற்றும் குருசுவாமி அஜிதேஷ் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் 13.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றிப்பெற்றது.

    • மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
    • நெல்லை அணி தரப்பில் பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி மதுரை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் கேப்டன் ஹரி நிசாந்த் களமிறங்கினர். கார்த்திக் ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபன் லீங்கேஷ் 6 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து நிசாந்த் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.

    நிதானமாக விளையாடி வந்த சுந்தர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிசாந்த் அரை சதம் கடந்தார். இவர் 64 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் முறையில் விக்கெட்டை இழந்தார்.

    கடைசி ஓவரில் பொய்யாமொழி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • இந்த தொடரில் தான் முதல் முறையாக ஐ.பி.எல். போட்டியை போல வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அதிகபட்சமாக 4 முறை (2017, 2019, 2021, 2022) டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றியது. கடந்த முறை கோவை கிங்சுடன் இணைந்து கூட்டாக பட்டம் பெற்றது. டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018), கோவை கிங்ஸ் (2022) தலா ஒரு தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் நாளை (திங்கட் கிழமை) தொடங்குகிறது. ஜூலை 12-ந்தேதி வரை திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் களான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், முன்னாள் சாம்பியனான மதுரை பாந்தர்ஸ், மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஜூலை 5-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைகிறது.

    லீக் சுற்றில் கோவையில் 6 ஆட்டமும், திண்டுக்கல்லில் 7 போட்டியும், சேலத்தில் 8 ஆட்டமும், நெல்லையில் 7 ஆட்டமும் நடத்தப்படுகிறது.

    28 லீக் ஆட்டம் உள்பட மொத்தம் 32 போட்டிகள் 25 தினங்களில் நடக்கிறது. 7 நாட்களில் மட்டும் 2 போட்டிகள் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று போட்டிகள் ஜூலை 7-ந் தேதி தொடங்குகிறது.

    அன்று முதல் தகுதி சுற்றும் (குவாலி பையர்-1), 8-ந் தேதி வெளியேற்றுதல் ஆட்டமும் (எலிமினேட்டர்) சேலத்தில் நடக்கிறது. 2- வது தகுதி சுற்று (குவாலி பையர் -2) 10-ந்தேதியும், இறுதிப் போட்டி 12-ந்தேதி யும் நெல்லையில் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் தான் முதல் முறையாக ஐ.பி.எல். போட்டியை போல வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டனர். கடந்த 6 தொடரில் வரைவு முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் ஐ.பி.எல்.லை போன்று டி.என்.பி.எல். போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் (இம்பேக்ட்) விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையும் முதல் முறை யாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் வைடு, நோபால் டி.ஆர்.எஸ். முறையில் கொண்டு வரப்படமாட்டாது.

    பிளேஆப் சுற்றின் 3 ஆட்டமும், இறுதிப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்றுதினத்தில் (ரிசர்வ் டே) நடைபெறும்.

    கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நாளை (12-ந் தேதி) இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    வெற்றியுடன் கணக்கை தொடங்கப் போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 4 முறை டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சை 13-ந் தேதி சந்திக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும். 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும். 5 முதல் 8-வது இடங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் வழங்கப்படும்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்.டி சேனல்களில் டி.என்.பி.எல் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • அபிஷேக் தன்வீர் கூறும்போது, இதுவரை அணி வீரராக ஆடினேன். தற்போது கேப்டன் பொறுப்பேற்று உள்ளேன்.
    • எங்கள் அணியில் கோவையை சேர்ந்த வீரர்களும் இருப்பதால் கோவை ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்றும் நம்புகிறோம்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்(டி.என்.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 7-வது சீசன் நாளை(திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(ஜூலை) 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

    இந்த போட்டிகள் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்கிறது. அதன்படி கோவையில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன.

    இதனை முன்னிட்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் ஜெகதீசன், நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் அருண்கார்த்திக், சேலம் அணி கேப்டன் அபிஷேக் தன்வீர் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் ஜெகதீசன் கூறியதாவது:-

    போட்டியின் போது எதிரணியின் வியூகத்தை பார்த்து எங்களது வெற்றிக்கு திட்டமிடுவோம். நடப்பு சாம்பியன் என்ற போதிலும் எவ்வித அழுத்தமும் இன்றி அணியினர் அனைவரும் ஒன்றாக இணைந்து உற்சாகத்துடன் இந்த போட்டிகளை எதிர்கொள்வோம். இதுவே எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் அருண் கார்த்திக் கூறும்போது, எங்கள் அணியில் கோவையை சேர்ந்த வீரர்களும் இருப்பதால் கோவை ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்றும் நம்புகிறோம். ஐ.பி.எல் போட்டி போன்று டி.என்.பி.எல் போட்டியிலும் இம்பாக்ட் வீரர் இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

    சேலம் அணி கேப்டன் அபிஷேக் தன்வீர் கூறும்போது, இதுவரை அணி வீரராக ஆடினேன். தற்போது கேப்டன் பொறுப்பேற்று உள்ளேன். அணியின் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து முழு முயற்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் விளையாட உள்ளோம் என்றார்.

    ×