என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல்- 6 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி
- மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
- ஆட்டத்தின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் 13.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றிப்பெற்றது.
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் கேப்டன் ஹரி நிசாந்த் களமிறங்கினர். கார்த்திக் ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபன் லீங்கேஷ் 6 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து நிசாந்த்- வாஷிங்டன் சுந்தர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த சுந்தர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிசாந்த் அரை சதம் கடந்தார்.
இவர் 64 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் முறையில் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் பொய்யாமொழி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.
இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, அருண் கார்த்திக் 32 ரன்களும், ஸ்ரீ நிரஞ்சன் 15 ரன்களும், குருசுவாமி அஜிதேஷ் 14 ரன்களும், சோனு யாதவ் 13 ரன்களும், எஸ்ஜே அருண் குமார் 11 ரன்களும் எடுத்தனர்.
இதில், நிதிஷ் ராஜகோபால் மற்றும் குருசுவாமி அஜிதேஷ் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் 13.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றிப்பெற்றது.






