என் மலர்
விளையாட்டு

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் ஜெகதீசன் பேட்டியளித்த போது எடுத்தபடம்.
டி.என்.பி.எல். போட்டிகளை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்வோம்- ஜெகதீசன்
- அபிஷேக் தன்வீர் கூறும்போது, இதுவரை அணி வீரராக ஆடினேன். தற்போது கேப்டன் பொறுப்பேற்று உள்ளேன்.
- எங்கள் அணியில் கோவையை சேர்ந்த வீரர்களும் இருப்பதால் கோவை ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்றும் நம்புகிறோம்.
தமிழ்நாடு பிரீமியர் லீக்(டி.என்.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 7-வது சீசன் நாளை(திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(ஜூலை) 12-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
இந்த போட்டிகள் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்கிறது. அதன்படி கோவையில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதனை முன்னிட்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் ஜெகதீசன், நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் அருண்கார்த்திக், சேலம் அணி கேப்டன் அபிஷேக் தன்வீர் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் ஜெகதீசன் கூறியதாவது:-
போட்டியின் போது எதிரணியின் வியூகத்தை பார்த்து எங்களது வெற்றிக்கு திட்டமிடுவோம். நடப்பு சாம்பியன் என்ற போதிலும் எவ்வித அழுத்தமும் இன்றி அணியினர் அனைவரும் ஒன்றாக இணைந்து உற்சாகத்துடன் இந்த போட்டிகளை எதிர்கொள்வோம். இதுவே எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் அருண் கார்த்திக் கூறும்போது, எங்கள் அணியில் கோவையை சேர்ந்த வீரர்களும் இருப்பதால் கோவை ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்றும் நம்புகிறோம். ஐ.பி.எல் போட்டி போன்று டி.என்.பி.எல் போட்டியிலும் இம்பாக்ட் வீரர் இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
சேலம் அணி கேப்டன் அபிஷேக் தன்வீர் கூறும்போது, இதுவரை அணி வீரராக ஆடினேன். தற்போது கேப்டன் பொறுப்பேற்று உள்ளேன். அணியின் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து முழு முயற்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் விளையாட உள்ளோம் என்றார்.