search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஞாயிறு"

    • ஞாயிறு கோவில் ஆதிசங்கரரையும், திருஞானசம்பந்தரையும் தொடர்பு கொண்டது.
    • அன்னையின் தரிசனம் கண்டவர்கள் அங்கேயே சிலையாக நின்று விடுவார்கள்.

    ஞாயிறு கோவில் ஆதிசங்கரரையும், திருஞானசம்பந்தரையும் தொடர்பு கொண்டது.

    இங்கு சொர்ணாம்பிகையை பூ பதஞ்செய்து சில்பப் பிரதிட்சை செய்து நவமாதா பீடத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டசை செய்தார்.

    இதனைக் காட்ட ஒரு தூணில் தண்டமேற்றிய ஆதிசங்கரரின் திருஉருவம் வடிக்கப்பட்டுள்ளது.

    அன்னையின் தரிசனம் கண்டவர்கள் அங்கேயே சிலையாக நின்று விடுவார்கள்.

    தாமரைத்தண்டு போல் விளங்கும் இரண்டு கைகளில் பூத்துக் குலுங்கும் மலர்கள், ஒரு கை அபயமும், அம்பிகையின் பாதங்கள் செம்பஞ்சுக் குழம்பினால் சிவந்திருக்குமாம்.

    இங்கும் குங்கும அர்ச்சனையால் செஞ்சுடர் பூச்சை காணலாம்.

    காமகோடி பீடாதிபதியின் பாதம் பட்ட இடமெல்லாம் காமாட்சியின் தொடர்பு இருந்தாக வேண்டுமே.

    எதிர்ப்புறத் தூணில் ஓமத்தீ வளர்த்து, அதன் நடுவே ஊசி முனையில் தவமியற்றும் காமாட்சி உருவமுள்ளது.

    ஸ்ரீ ஆதிசங்கரர் நவ மாதா பீடம் பிரதிட்டை செய்தார். இப்போது பீடம் மட்டும்தான் இருக்கிறது.

    காஞ்சி காமகோடி பீடாதிபதி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கரச்சாரிய சாமிகள் அருள் ஆசியுடன் ஸ்ரீவித்யா வெங்கட்ராம் சாஸ்திரிகள் மற்றும் அடியார்கள் சவுபாக்ய பஞ்ச சக்தி மகாயந்திரம் பிரதிட்சை செய்தார்கள்.

    வெள்ளிக்கிழமை பவுர்ணமி தினத்தில் ஞாயிறு அன்று சொர்ணாம்பிகை தரிசனம் செய்ய வேண்டும்.

    தரிசனம் செய்தால் இந்த பஞ்ச மகா சக்திகளை வாங்கிய பலன் கிடைக்கும்.

    பஞ்ச மகா சக்திகளின் தலங்கள்

    ஞாயிறு - சொர்ணவடிவு

    மயிலை - கற்பக வடிவு

    மேலூர் - திருவுடைய வடிவு

    திருவொற்றியூர் - வடிவுடைய வடிவு

    திருமுல்லைவாயில் - கொடியிடைய வடிவு பஞ்சவடிவு அம்சங்கள்

    • இப்பகுதியானது சங்கிலிநாச்சியார் அவதரித்து வளர்ந்த பெருமையுடையது.
    • இப்பகுதியானது சங்கிலிநாச்சியார் அவதரித்து வளர்ந்த பெருமையுடையது.

    இப்பகுதியானது சங்கிலிநாச்சியார் அவதரித்து வளர்ந்த பெருமையுடையது.

    பழைய சிவாலயம் உண்டு.

    சோழர் காலத்து திருப்பணியுடையது.

    சுவாமி பூதேரிஸ்வரர் (புஷ்பரதேஸ்வர்) அம்மை சொர்ணாம்பிகை கோவில்களுடைய காரணீசுவரர் சந்நிதி உண்டு.

    மற்றும் கபாலீசுவரர், ஜம்புகேஸ்வரர், ரணேயேஸ்வரர் என்ற மூன்று சந்திதிகளும் உண்டு.

    காசியாத்திரையாக இவ்வழி வந்த சோழ அரசர், இங்கு தடாகத்து நடுவில் தனியாய் மலர்ந்திருந்த அழகியதோர் தாமரை மலரைப் பறிக்க முயன்றபோது

    கண் மறைந்ததாகவும், யாத்திரை செய்து திரும்புகையில் திருப்பணி செய்வதற்காக பிரார்த்தித்தவுடன் அரைக் கண் பார்வை பெற்றதாகவும்,

    அவ்வாறே திரும்பி வந்தபோது அந்த தாமரையின் மேல் இறைவன் பேரொளியுடன் ஞாயிறாகத் தோன்றியதாகவும்,

    அந்த இடத்தில் கர்பக் கிரகம் அமைத்து திருப்பணி செய்தபின் கண் ஒளி முழுவதும் பெற்றதாகவும்,

    அது முதல் இத்தலத்திற்கு ஞாயிறு என்று பெயர் வழங்குவதாகவும் வருவது கர்ணபரம்பரை வரலாறு.

    (சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணி முதலியார் பெரியபுராணம் என்ற தம் ஆராய்ச்சி நூலில் எழுதியுள்ளார்)

    ×