search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கிலிநாச்சியார்"

    • இப்பகுதியானது சங்கிலிநாச்சியார் அவதரித்து வளர்ந்த பெருமையுடையது.
    • இப்பகுதியானது சங்கிலிநாச்சியார் அவதரித்து வளர்ந்த பெருமையுடையது.

    இப்பகுதியானது சங்கிலிநாச்சியார் அவதரித்து வளர்ந்த பெருமையுடையது.

    பழைய சிவாலயம் உண்டு.

    சோழர் காலத்து திருப்பணியுடையது.

    சுவாமி பூதேரிஸ்வரர் (புஷ்பரதேஸ்வர்) அம்மை சொர்ணாம்பிகை கோவில்களுடைய காரணீசுவரர் சந்நிதி உண்டு.

    மற்றும் கபாலீசுவரர், ஜம்புகேஸ்வரர், ரணேயேஸ்வரர் என்ற மூன்று சந்திதிகளும் உண்டு.

    காசியாத்திரையாக இவ்வழி வந்த சோழ அரசர், இங்கு தடாகத்து நடுவில் தனியாய் மலர்ந்திருந்த அழகியதோர் தாமரை மலரைப் பறிக்க முயன்றபோது

    கண் மறைந்ததாகவும், யாத்திரை செய்து திரும்புகையில் திருப்பணி செய்வதற்காக பிரார்த்தித்தவுடன் அரைக் கண் பார்வை பெற்றதாகவும்,

    அவ்வாறே திரும்பி வந்தபோது அந்த தாமரையின் மேல் இறைவன் பேரொளியுடன் ஞாயிறாகத் தோன்றியதாகவும்,

    அந்த இடத்தில் கர்பக் கிரகம் அமைத்து திருப்பணி செய்தபின் கண் ஒளி முழுவதும் பெற்றதாகவும்,

    அது முதல் இத்தலத்திற்கு ஞாயிறு என்று பெயர் வழங்குவதாகவும் வருவது கர்ணபரம்பரை வரலாறு.

    (சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணி முதலியார் பெரியபுராணம் என்ற தம் ஆராய்ச்சி நூலில் எழுதியுள்ளார்)

    ×