search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சொர்ணாம்பிகை அருளாட்சி
    X

    சொர்ணாம்பிகை அருளாட்சி

    • ஞாயிறு கோவில் ஆதிசங்கரரையும், திருஞானசம்பந்தரையும் தொடர்பு கொண்டது.
    • அன்னையின் தரிசனம் கண்டவர்கள் அங்கேயே சிலையாக நின்று விடுவார்கள்.

    ஞாயிறு கோவில் ஆதிசங்கரரையும், திருஞானசம்பந்தரையும் தொடர்பு கொண்டது.

    இங்கு சொர்ணாம்பிகையை பூ பதஞ்செய்து சில்பப் பிரதிட்சை செய்து நவமாதா பீடத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டசை செய்தார்.

    இதனைக் காட்ட ஒரு தூணில் தண்டமேற்றிய ஆதிசங்கரரின் திருஉருவம் வடிக்கப்பட்டுள்ளது.

    அன்னையின் தரிசனம் கண்டவர்கள் அங்கேயே சிலையாக நின்று விடுவார்கள்.

    தாமரைத்தண்டு போல் விளங்கும் இரண்டு கைகளில் பூத்துக் குலுங்கும் மலர்கள், ஒரு கை அபயமும், அம்பிகையின் பாதங்கள் செம்பஞ்சுக் குழம்பினால் சிவந்திருக்குமாம்.

    இங்கும் குங்கும அர்ச்சனையால் செஞ்சுடர் பூச்சை காணலாம்.

    காமகோடி பீடாதிபதியின் பாதம் பட்ட இடமெல்லாம் காமாட்சியின் தொடர்பு இருந்தாக வேண்டுமே.

    எதிர்ப்புறத் தூணில் ஓமத்தீ வளர்த்து, அதன் நடுவே ஊசி முனையில் தவமியற்றும் காமாட்சி உருவமுள்ளது.

    ஸ்ரீ ஆதிசங்கரர் நவ மாதா பீடம் பிரதிட்டை செய்தார். இப்போது பீடம் மட்டும்தான் இருக்கிறது.

    காஞ்சி காமகோடி பீடாதிபதி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கரச்சாரிய சாமிகள் அருள் ஆசியுடன் ஸ்ரீவித்யா வெங்கட்ராம் சாஸ்திரிகள் மற்றும் அடியார்கள் சவுபாக்ய பஞ்ச சக்தி மகாயந்திரம் பிரதிட்சை செய்தார்கள்.

    வெள்ளிக்கிழமை பவுர்ணமி தினத்தில் ஞாயிறு அன்று சொர்ணாம்பிகை தரிசனம் செய்ய வேண்டும்.

    தரிசனம் செய்தால் இந்த பஞ்ச மகா சக்திகளை வாங்கிய பலன் கிடைக்கும்.

    பஞ்ச மகா சக்திகளின் தலங்கள்

    ஞாயிறு - சொர்ணவடிவு

    மயிலை - கற்பக வடிவு

    மேலூர் - திருவுடைய வடிவு

    திருவொற்றியூர் - வடிவுடைய வடிவு

    திருமுல்லைவாயில் - கொடியிடைய வடிவு பஞ்சவடிவு அம்சங்கள்

    Next Story
    ×