என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜெயில் தண்டனை"
- கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்துல் ஹக்கீமை போலீசார் கைது செய்தனர்.
- வழக்கை விசாரித்த கோர்ட்டு, அப்துல் ஹக்கீமுக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவர் அங்குள்ள மதரசா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு பட்டாம்பி போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அப்துல் ஹக்கீமுக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
- நீலகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
- பெயா் மாற்று சான்று வழங்க ஜெயலட்சுமி ரூ.1, 800 லஞ்சம் கேட்டுள்ளாா்
நீலகிரி,
மஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவா் கடந்த 2008ல் புதிதாக வாங்கிய தொழிலாளா் இல்லத்துக்கு பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, பெயா் மாற்று சான்று பெற கீழ்குந்தா நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய ஜெயலட்சுமி என்பவரை அனுகியுள்ளாா்.
பெயா் மாற்று சான்று வழங்க ஜெயலட்சுமி ரூ.1, 800 லஞ்சம் கேட்டுள்ளாா்.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிவகுமாா் புகாா் அளித்தாா். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயலட்சுமியிடம், சிவகுமாா் வழங்கினாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா், லஞ்சம் பெற்ற ஜெயலட்சுமியை பிடித்தனா். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவில் ஜெயலட்சுமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
- தலை, கை மற்றும் வலது கால் ஆகிய இடங்களில் வெட்டினர்.
- வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த ஜாகீர்உசேன்.
இவர் தனது வாழை தோட்டத்திற்கு செல்வதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு மைதானம் மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தியாகு, சக்திவேல் ஆகியோர் ஜாகீர்உசேனிடம் மது குடிக்க பணம் கேட்டனர். இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது திடீரென சக்திவேல், தியாகு இருவரும் ஜாகீர் உசேனை தகாத வார்த்தைகளால் பேசி வாழை இலை அறுக்கும் கத்தியால் ஜாகீர் உசேனின் தலை, கை மற்றும் வலது கால் ஆகிய இடங்களில் வெட்டினர். இதுதொடர்பாக ஜாகீர் உசேன் கொடுத்த புகாரின் பேரில் அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சென்னகேசவன் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்.
இந்த வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி சிவகுமார் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட தியாகுவிற்கு 4 ஆண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், சக்திவேலிற்கு 3 ஆண்டு சிறை தண்டணையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பு கூறினார்.
- டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதால் தீர்ப்பளிக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மோகன்ராஜ் மனு தாக்கல் செய்தார்.
- வழக்கில் தீர்ப்பு கூற இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரியில் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை:
திருப்பூரில் கடந்த 2011-ம் ஆண்டு பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றினர். இது தொடர்பாக புகார் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
விசாரணையில் 58 ஆயிரத்து 571 பேரிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன், கமலவள்ளி ஆகியோர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட (டான்பீட்) சிறப்பு கோர்ட்டில் நடந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி இறுதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 9 ஆண்டுகளாக சாட்சி விசாரணை நடந்து வந்தது.
அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு சாட்சியம், இரு தரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதால் தீர்ப்பளிக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மோகன்ராஜ் மனு தாக்கல் செய்தார்.
அதை தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு கூற இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரியில் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருதரப்பு மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு இடைக்கால தடையை நீக்கியதோடு, கோவை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து தீர்ப்பளிக்க கடந்த 5-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பான உத்தரவு நகலை கடந்த 10-ந்தேதி சி.பி.ஐ.தரப்பு வக்கீல், கோவை டான்பீட் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து வழக்கில் 22-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ரவி அறிவித்தார்.
அதன்படி 22-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன்ராஜ் தரப்பில் பணம் கொடுக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை 26-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இன்று காலை பாசி மோசடி வழக்கு கோவை டான்பீட் கோர்ட்டில் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, மோசடியில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகியோருக்கு தலா 27 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.171 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கெவின் கிரீம் , மரினா கிரீம் தம்பதியின் இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரீமின் 6 வயது மகள் மற்றும் அவளின் இரண்டு வயது தம்பி இருவரும் யோசிலின் ஆர்டிகா என்ற 55 பெண் பராமரிப்பின் கீழ் இருந்தனர்.
சம்பவம் நடந்த அன்று மரினா கிரீம் தனது வீட்டை திறந்து பார்த்த போது வீட்டு குளியலறையில் இரண்டு குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதை கண்ட அவர் அதிர்ர்சியில் உறைந்தார்.
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் ஆர்டிகாவை கைது செய்தனர். 6 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஆர்டிகாவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற ஆர்டிகாவுக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இது கிரீம் குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #YoselynOrtega
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்