search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயில் தண்டனை"

    • வழக்கு தேவிகுளத்தில் உள்ள போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
    • வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பூப்பாறை பகுதியில் தனத காதலனுடன் சென்ற 14 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. உடனிருந்த காதலனை அடித்து விரட்டிவிட்டு அந்த 6 பேரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சந்தப்பரா போலீசார் வழக்குப்பதிந்து, சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த நெல்லையை சேர்ந்த சுகந்த்(வயது20), போடியை சேர்ந்த சிவகுமார்(21), பூப்பாறையை சேர்ந்த சாமுவேல் என்கிற ஷியாம் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர்.

    அவர்களின் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தேவிகுளத்தில் உள்ள போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட சுகந்த், சிவகுமார், சாமுவேல் ஆகிய 3 பேருக்கும் 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிராஜூதீன் உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    அந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறுவர்கள் இருவர் மீதான விசாரணை தொடுபுழா சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    • ஆரோக்கியநாதன் போலி ஆவணம் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தது தெரிய வந்தது.
    • நீதிபதி மோகன் குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். இவர் கடந்த 9.01.2014-ல் புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் தனது போலியான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை கொடுத்து பிரெஞ்சு குடியுரிமை பெற சிலர் முயற்சிப்பதாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

    விசாரணையில் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ஆரோக்கியநாதன் போலி ஆவணம் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தது தெரிய வந்தது. மேலும் சோலைநகரை சேர்ந்த சாரங்கபாணி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் குற்றம் சாட்டப்பட்ட ஆரோக்கிய நாதன், சாரங்கபாணி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரியில் போலியான ஆவணங்கள் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தவர்களுக்கு முதல்முறையாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார்.
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டம், கனி கிரியை சேர்ந்தவர் மகபூப் பாஷா (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது விருப்பத்திற்கு மாறாக பலமுறை பலாத்காரம் செய்தார்.

    இதேபோல் ஐதராபாத் அழைத்துச் சென்றும் அங்கு சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். ஓங்கோல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் மெகபூப் பாஷாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக ஓங்கோல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சோமசேகர் தீர்ப்பு வழங்கினார்.

    மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த மகபூப் பாஷாவிற்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    • கர்ப்பிணி பெண்ணின் கணவரை சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்து ரூ. 750-ஐ பறித்தனர்.
    • கர்ப்பிணி பெண்ணை வலுக்கட்டாயமாக நடைபாதைக்கு பின்புறம் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் எர்ரகொண்டா பாலம் மண்டலத்தை சேர்ந்தவர் 30 வயது கர்ப்பிணிப் பெண்.

    இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி இரவு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கிருஷ்ணா மாவட்டம், நாகயலங்கா என்ற இடத்திற்கு கூலி வேலைக்கு செல்வதற்காக பாபட்லா மாவட்டம், ரேப்பள்ளி ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

    இரவு நேரம் என்பதால் அங்குள்ள ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த 2 வாலிபர்கள் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை தட்டி எழுப்பினர்.

    கர்ப்பிணி பெண்ணின் கணவரை சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்து ரூ. 750-ஐ பறித்தனர்.

    பின்னர் கர்ப்பிணி பெண்ணை வலுக்கட்டாயமாக நடைபாதைக்கு பின்புறம் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    வாலிபர்களிடம் இருந்து தப்பிச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது குறித்து ரேப்பள்ளி ரெயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மற்றும் ஒரு சிறுவனை பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விஜய கிருஷ்ணா (வயது 25), நிகில் (20) என தெரியவந்தது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கு குண்டூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சரத் பாபு முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.

    விசாரணை முடிந்து பாலியல் பலாத்கார வழக்கில் நீதிபதி சரத் பாபு நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விஜய கிருஷ்ணா மற்றும் நிகிலுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.

    • மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி .போலீசார் தீவிரம்
    • காசிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்ட னைக்கு பாடகி சின்மயி வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (வயது 28) என்ஜினியர்.

    இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் உள்பட சிலர் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் அளித்தனர். அந்த புகாரில் காசி தங்களுடன் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறியிருந்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகாரும் அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அவர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து காசியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் காசிக்கு உதவியதாக அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆதாரங்களை அளித்ததாக காசியின் தந்தை தங்க பாண்டியனையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து காசியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.

    காசி ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக காசி ஜெயிலிலேயே இருந்து வருகிறார். அவர் மீதான 8 வழக்குகளில் 6 வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ள நிலையில் அந்த வழக்குகள் விசாரணை நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த பாலியல் வழக்கில் 29 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் காசியிடமிருந்து கைப்பற் றப்பட்ட லேப்டாப்பில் இருந்த ஆபாச படங்களின் ஆதாரங்களை வைத்தும் விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கில் காசி குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பலாத்கார வழக்கில் 3 பிரிவுகளின் கீழ் காசிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 376 (2 என்) பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்திய தண்டனைச் சட்டம் 354 (சி) இளம் பெண்ணை அந்தரங்க வீடியோ எடுத்த குற்றத்திற் காக 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், 506 (2) கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. வழக்கு தீர்ப்பு காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து காசியை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தனர். தீர்ப்பை கேட்டு காசி கண் கலங்கினார். இதை தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் பாளை யங்கோட்டை ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

    காசிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப் பட்டதையடுத்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காசிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்ட னைக்கு பாடகி சின்மயி வரவேற்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    காசி மீதான பாலியல் வழக்கில் அவருக்கு தண்ட னை விதிக்கப்பட்டதை யடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள மேலும் 5 வழக்குகளை துரிதமாக முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த வழக்குகள் விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகள் விசாரணை தற்போது நடந்து வருகிறது. இந்த வழக்குகளுக்கான தீர்ப்புகளும் விசாரணை முடிந்து விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள மேலும் 2 வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சத்யா நகர் பகுதியில் சாலையை கட க்கும்போது, எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி, கொளத்தூர் சின்னமேட்டூரை சேர்ந்த கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் செல்வம் பலத்த காயமடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸ் எஸ்.ஐ. சுதாகரன் வழக்கு பதிவு செய்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்துக்கு காரணமான கருப்பண்ண னுக்கு 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர்.
    • ரவுடிகள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை காந்தி வீதியில் பேக்கரி வைத்திருப்பவர் சண்முகசுந்தரம். இவரது பேக்கரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் புதுவை வைத்திகுப்பத்தைச் சேர்ந்த எலி கார்த்திகேயன் (30), வாணரப்பேட்டையை சேர்ந்த மதி மணிகண்டன் (29) ஆகியோர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து எலி கார்த்தி, மதி ஆகியோரைக் கைது செய்தனர்.

    அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட எலிகார்த்திக், மதி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார்.
    • மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சொந்தமாக செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக 5 லாரிகள் உள்ளது. அவரிடம் லாரி டிரைவராக இரவிபுதூர்கடையை சேர்ந்த முருகேசன் என்ற முருகன் (வயது29) என்பவர் வேலைபார்த்து வந்தார். வேலைக்கு வரும் போது முருகேசன் தொழிலதிபரின் 14 வயது மகளிடம் பேசுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 11-5-98 அன்று முருகேசன் தொழிலதிபர் வீட்டிற்கு ஒரு காரில் வந்தார். காரில் மேலும் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள் திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்த தொழிலதிபரின் 14 வயது மகளை காரில் ஏற்றி கடத்தினர்.

    இதனை கண்டு சிறுமியின் உறவினர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரெயில் மூலம் மும்பை சென்றுள்ளனர்.

    அங்கு ஒரு வீட்டில் முருகேசனும், 14 வயது சிறுமியும் கணவன், மனைவி எனகூறி தங்கியுள்ளனர். பின்னர் முருகேசன், 14 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார். அங்கு முருகேசனின் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார். இதற்கிடையே மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.

    பின்னர் குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இது தொடர்பான வழக்கு குமரி மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ராஜ், சிறுமியை கடத்திய முருகேசனுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது.
    • அலாவுதீன், வாகித் ஆகியோர் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு முகநூலில் இருந்து துணை நடிகை பெயரில் நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    நடிகர் கனா தர்ஷனின் பெயரில் அவரது புகைப்படத்துடன் கூடிய பேஸ்புக் பக்கத்தில் இருந்து விடுக்கப்பட்ட நட்பு அழைப்பை ஏற்று இளம்பெண்ணும் முகநூல் வழியாக பழக தொடங்கினார்.

    அப்போது முகநூல் வழியாக இளம்பெண்ணுக்கு சினிமா, தொலைக்காட்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நாங்கள் நினைத்தால் உங்களையும் பெரிய நடிகையாக்க முடியும் என்று ஆசை வார்த்தைகளை தெரிவித்து உள்ளனர். உங்களது போட்டோக்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் நடிகையாக தேர்வு செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

    இதனை நம்பி சினிமா நடிகையாகும் ஆசையில் இளம்பெண் தனது விதவிதமான போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார்.

    இதன்பிறகு இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணுக்கே அனுப்பி 2 பேர் மிரட்டி உள்ளனர். இதன்பிறகே சினிமா நடிகர் பெயரில் தொடங்கப்பட்டது போலி கணக்கு என்பது தெரிய வந்துள்ளது.

    நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது. இருவரும் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

    நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து ரூ.2 லட்சம் வரை பறித்துள்ளனர். அதன் பின்னரும் தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் பேரில் போலீசார் பணம் பறித்த சகோதரர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அண்ணன்-தம்பி இருவரின் செல்போன் எண்ணை வைத்து அவர்களின் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். இருவரும் ஈரோட்டில் பி.பி.அக்ரகாரம் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்து காஞ்சிபுரத்துக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அலாவுதீன், வாகித் இருவரும் இதுபோன்று பல பெண்களை மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. இதையடுத்து இருவரது செல்போன்கள், அவர்கள் பயன்படுத்திய லேப்-டாப் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும் இருந்தன.

    இதனை கைப்பற்றிய போலீசார் ரகசியமாக அப்பெண்களிடமும் புகார்களை வாங்கி மேல் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    • சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை சச்சு சாம்சனை கைது செய்தனர்.
    • வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சிறயின்கீழ் பகுதியை சேர்ந்தவர் சச்சு சாம்சன் (வயது 34). திருநங்கை.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரெயில் பயணத்தின் போது ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இதையடுத்து சிறுவனை சச்சு சாம்சன் திருவனந்தபுரம் தம்பானூர் பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதன்பின்பு சச்சுசாம்சனை சந்திக்க சிறுவன் மறுத்தான். இதனால் அவர் செல்போன் மூலம் சிறுவனை தன்னுடன் வருமாறு அழைத்தார்.

    இதனால் பயந்து போன சிறுவன் இதுபற்றி பெற்றோரிடம் கூறினான். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை சச்சு சாம்சனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.

    வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு திருநங்கை சச்சு சாம்சனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

    மேலும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டாவிட்டால் கூடுதலாக ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

    திருநங்கை ஒருவருக்கு கற்பழிப்பு வழக்கில் கோர்ட்டு தண்டனை விதித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

    • சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது.
    • பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, வாகனத்தின் பதிவுச் சான்று ஓராண்டிற்கு ரத்து செய்யப்படும்.

    மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுனர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.

    மேலும் புதுவையில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு முதல்முறை ரூ.ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

    வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர் உரிமத்தின் ஒரிஜினல் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவீந்திரன் நாயருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளியில் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தார்.

    இதனை கவனித்த வகுப்பு ஆசிரியை, அந்த மாணவியை அழைத்து விசாரித்தார். அப்போது பள்ளிக்கு வரும் வழியில் முதியவர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும். அதனை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவம் குறித்து ரகசியமாக விசாரித்தனர்.

    இதில் திருவனந்தபுரம் வெள்ளயம்பலம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் நாயர் (வயது 64) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவீந்திரன் நாயரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்தது.

    ரவீந்திரன் நாயர் மீதான வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவீந்திரன் நாயருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    ×