என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜமாபந்தி தொடக்கம்"
- உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இந்த பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் விஜயகுமார், நெடுமாறன், துணை தாசில்தார்கள் சுபிச்சந்தர் டி.ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் கே.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்தி மேலாளர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜமாபந்தி முதல் நாளான நேற்று பரதராமி, குடியாத்தம் நகரம், பிச்சனூர், கொண்டசமுத்திரம், செதுக்கரை, தாட்டிமானபல்லி, கல்லப்பாடி, ராமாலை, புட்டவாரிபல்லி, டி.பி.பாளையம், ரங்கசமுத்திரம், வீரிசெட்டிபல்லி, வரதாரெட்டிபல்லி, வி.டி.பாளையம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கேட்டு 60 பேர் மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நில அளவை வட்ட துணை ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்க குடியாத்தம் வட்ட தலைவர் எம்.செந்தில், செயலாளர் ஆர்.சசிகுமார், பொருளாளர்கள் காந்தி, வெங்கடாஜலபதி, ரகு, ஜெயமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- பொது மக்கள் கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம்.
கோத்தகிரி,
கோத்தகிரி தாசில்தார் காயத்ரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோத்தகிரி தாலுகா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, நெடுகுளா உள் வட்டத்திற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) முகாம் வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்கள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கு குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி தலைமை தாங்குகிறார்.
28-ந் தேதி கோத்தகிரி, 29-ந் தேதி கோத்தகிரி, 30 ந் தேதி கோத்தகிரி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளதையொட்டி ஊழியர்கள் ஆவணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் தாசில்தார் சித்தராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டு உள்ளதாவது:
கூடலூர் தாலுகாவில் பசலி 1431-க்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் தேவர்சோலை உள்வட்டத்துக்கும், 29-ந் தேதி கூடலூர் உள்வட்டத்துக்கும் ஜமாபந்தி நடக்கிறது. கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்குகிறார். எனவே, பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்