search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் ஜமாபந்தி தொடக்கம்

    • உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இந்த பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் விஜயகுமார், நெடுமாறன், துணை தாசில்தார்கள் சுபிச்சந்தர் டி.ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் கே.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்தி மேலாளர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜமாபந்தி முதல் நாளான நேற்று பரதராமி, குடியாத்தம் நகரம், பிச்சனூர், கொண்டசமுத்திரம், செதுக்கரை, தாட்டிமானபல்லி, கல்லப்பாடி, ராமாலை, புட்டவாரிபல்லி, டி.பி.பாளையம், ரங்கசமுத்திரம், வீரிசெட்டிபல்லி, வரதாரெட்டிபல்லி, வி.டி.பாளையம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கேட்டு 60 பேர் மனு அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நில அளவை வட்ட துணை ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்க குடியாத்தம் வட்ட தலைவர் எம்.செந்தில், செயலாளர் ஆர்.சசிகுமார், பொருளாளர்கள் காந்தி, வெங்கடாஜலபதி, ரகு, ஜெயமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×