search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள்கள்"

    • இந்திய தூதரக கட்டிடம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு.
    • இந்திய தூதர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

     அண்டனானரிவோ:

    இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மடகாஸ்கருடன் இந்தியா நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், தகவல் பரிமாற்றம் உள்ளிடட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

    இந்நிலையில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா இன்று வழங்கியுள்ளது. நிகழ்ச்சியில் மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே ஆகியோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஓட்டி சென்று இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.  


    மேலும், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மடகாஸ்கர் தலைநகர் அண்டனானரிவோவில் உள்ள இந்திய தூதரக கட்டிடம் இந்திய தேசிய கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்திய தூதர் அபய் குமார், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நாடார் மேல்நிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
    • ராஜபாளையம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ண மராஜ பாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி. ப்ரித்தி முன்னிலை வகித்தார்.

    விழாவில் மாணவ, மாணவியர்கள் போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் விஜயராஜன், உறவின் முறை தலைவர் ஆதவன், தலைமை ஆசிரியர் வெங்கடேசன்,தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, கவுன்சிலர்கள் பாரத், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×