search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட்"

    • ஓபன் பிரிவில் இன்று இந்திய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
    • இந்திய ‘பி’ அணி, கியூபாவுடன் மோதுகிறது.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 187 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் விளையாடி வருகிறார்கள்.

    ஓபன் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 11 சுற்றுகளாக நடந்து வரும் இப்போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் நடந்துள்ளது. நேற்று ஓய்வு நாளாகும். இன்று 7-வது சுற்று போட்டி நடக்கிறது.

    ஓபன் பிரிவில் இன்று இந்திய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. ஹரி கிருஷ்ணா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகாசி, நாராயணன், சசிகரண் ஆகியோர் அடங்கிய இந்திய 'ஏ' அணி, சூர்யசேகர் கங்குலி, சேது ராமன், அபிஜித் குப்தா, முரளி கார்த்திகேயன், அபி மன்பு புரானிக் ஆகியோரை கொண்ட இந்திய 'சி' அணியுடன் மோதுகிறது.

    இந்த சீசனில் இந்திய வீரர்கள் முதல் முறையாக நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்திய 'பி' அணி, கியூபாவுடன் மோதுகிறது. இந்த அணியில் டி.குகேஷ், சரின் நிஹல், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானிரானக் ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ஓபன் பிரிவில் இந்தியாவின் மூன்று அணிகளும் 10 புள்ளிகளுடன் உள்ளன.

    பெண்கள் பிரிவில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்திய 'ஏ' அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    இந்திய 'ஏ' அணி 7-வது சுற்றில் அஜர்பைஜானுடன் மோதுகிறது. அஜர்பைஜான் அணி 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. முதல் 6 சுற்றுகளில் அசத்திய இந்திய 'ஏ' அணி 7-வது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது.

    வந்திகா, பத்மினி, சவுமியா திவ்யா, கோமஸ் மேரி அன் ஆகியோரை கொண்ட இந்திய 'பி' அணி இன்று கிரீஸ் அணியுடன் மோதுகிறது. இந்திய 'சி' அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த அணியில் நந்திதா, வர்ஷினி, ஈஷா கரவாடே, பிரத்யுஷா, விஷ்வா, வஸ்னவாலா ஆகியோர் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் இந்திய பி மற்றும் சி அணிகள் தலா 9 புள்ளிகளுடன் முறையே 15 மற்றும் 19-வது இடத்தில் உள்ளன.

    ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி தனது முதல் 5 சுற்றுகளில் வென்றது. 6-வது சுற்றில் அர்மேனியாவிடம் தோற்றது.

    அந்த அணியில் இடம் பெற்றுள்ள குகேஷ் தான் மோதிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

    • அமெரிக்கா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
    • இந்திய ‘பி’ அணி 15-வது இடத்திலும், இந்திய ‘சி’ அணி 19-வது இடத்திலும் இருக்கின்றன.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 186 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    நேற்று 6-வது சுற்று ஆட்டம் நடந்தது. ஓபன் பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய 'பி' அணிக்கு நேற்று சறுக்கல் ஏற்பட்டது. 1.5-2.5 என்ற கணக்கில் பலம் வாய்ந்த அர்மெனியாவிடம் தோற்றது. இந்த தொடரில் முதல் தோல்வியை தழுவியது.

    இந்த சுற்றில் சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் மட்டுமே வெற்றி பெற்றார். அவர் தொடர்ந்து 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளார். பி.அதிபன், சத்வானி தோல்வியை தழுவினார்கள். சரீன் நிஹால் 'டிரா' செய்தார்.

    இந்திய 'ஏ' அணி உஸ்பெகிஸ்தானுடன் 2-2 என்ற கணக்கில் 'டிரா' செய்தது. இந்திய 'சி' அணி 3.5.-1.5 என்ற கணக்கில் லிதுவேனியாவை வீழ்த்தியது.

    6 சுற்றுகள் முடிவில் அர்மெனியா 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருந்து வந்த இந்திய 'பி' அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு பின் தங்கியது.

    உஸ்பெகிஸ்தான், பிரான்ஸ், இந்தியா 'ஏ', நெதர்லாந்து, கியூபா, இந்தியா 'சி', ஜெர்மனி, கஜகஸ்தான், செர்பியா, பெரு அணிகளும் 10 புள்ளிகளை பெற்று உள்ளது. 'டை' பிரேக்கர் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 4 முதல் 13-வது இடங்களில் உள்ளன. அதாவது இந்தியா 'ஏ' அணி 6-வது இடத்திலும், இந்தியா 'சி' அணி 9-வது இடத்திலும் உள்ளன.

    அமெரிக்கா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தியது. சென்னையை சேர்ந்த வைஷாலி, கோனேரு ஹம்பி ஆகியோர் வெற்றி பெற்றனர். ஹரிகா, தானியா சச்தேவ் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது.

    இந்திய 'பி' அணி 2-2 என்ற கணக்கில் செக்குடிய ரசுடன் 'டிரா' செய்தது. இந்திய 'சி' அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் 6 ரவுண்டுகள் முடிவில் இந்திய 'ஏ' அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. அசர்பெய் ஜான், ருமேனியா தலா 11 புள்ளிகளுடன் முறையே 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

    போலந்து, உக்ரைன், அர்மெனியா, பல்கேரியா, இஸ்ரேல், ஜார்ஜியா, வியட்னாம், நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 4 முதல் 11-வது இடங்களில் உள்ளன.

    இந்திய 'பி' அணி 15-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 19-வது இடத்திலும் இருக்கின்றன.

    இன்று ஓய்வு நாளாகும். இன்னும் 5 சுற்றுகள் எஞ்சியுள்ளன. 7-வது சுற்று நாளை நடக்கிறது.

    • ஓபன் பிரிவில் 5 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி அர்மெனியாவுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளது.
    • நாளை ஓய்வு நாளாகும். 7-வது சுற்று ஆட்டம் 5-ந்தேதி நடக்கிறது.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய 'பி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஸ்பெயினை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது. டி.குகேஷ், பி.அதிபன் ஆகியோர் வெற்றி பெற்றனர். நிகல் 'டிரா' செய்தார். பிரக்ஞானந்தா அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இந்திய 'ஏ' அணி 2.5-2.5 என்ற கணக்கில் ருமேனியாவுடன் 'டிரா' செய்தது. இந்திய 'சி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் சிலியை வீழ்த்தியது.

    ஓபன் பிரிவில் 5 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி அர்மெனியாவுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் டை பிரேக்கரில் இந்திய 'பி' அணி தான் முன்னிலையில் இருக்கிறது. இந்தியா 'ஏ' அணி 9 புள்ளியுடன் 4-வது இடத்திலும், இந்திய 'பி' அணி 8 புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

    இன்று 6-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. இதில் இந்திய 'பி' அணி அர்மெனியாவை எதிர் கொள்கிறது. முன்னிலையில் உள்ள இரு அணிகளும் மோதுவதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய 'ஏ' அணி உஸ்பெகிஸ்தானையும், இந்திய 'சி' அணி லிதுவேனியாவையும் எதிர்த்து விளையாடுகிறது.

    பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 2.5-1.5 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்தது. இந்திய 'பி' அணி 1-3 என்ற கணக்கில் ஜார்ஜாவிடம் தோற்றது.

    இந்திய 'சி' அணி பிரேசிலுடன் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி, ஜார்வியா, ருமேனியா ஆகிய 3 அணிகள் தலா 10 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளன. இந்திய 'பி' அணி 8 புள்ளியுடன் 18-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 7 புள்ளியுடன் 29-வது இடத்திலும் உள்ளன.

    இன்றைய 6-வது சுற்றில் இந்திய 'ஏ' அணி ஜார்ஜியாவுடனும், இந்திய 'பி' அணி செக்குடியரசுடனும், இந்திய 'சி' அணி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகின்றன.

    நாளை ஓய்வு நாளாகும். 7-வது சுற்று ஆட்டம் 5-ந்தேதி நடக்கிறது.

    • 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.
    • செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    ஏற்கனவே, 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.

    இதில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார். பிரேசில் வீராங்கனையை எதிர்கொண்டபோது 32வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றார். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் இந்திய வீரர் அபிமன்யு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், 5-வது சுற்று ஆட்டடத்தில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்துள்ளார். ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவுடன் மோதி பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.

    • 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.
    • செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    ஏற்கனவே, 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார். பிரேசில் வீராங்கனையை எதிர்கொண்டபோது 32வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார்.

    தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் இந்திய வீரர் அபிமன்யு வெற்றி பெற்றுள்ளார்.

    • எங்கள் நாட்டில் தற்போது மோசமான நிலை இருந்தாலும் செஸ் மீதுள்ள ஈடுபாட்டால் விளையாட வந்துள்ளேன்.
    • தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை செஸ்சின் மெக்கா என அழைக்கப்படுகிறது.


    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இலங்கை வீராங்கனை சச்சினி கூறியதாவது:-

    எங்கள் நாட்டில் தற்போது மோசமான நிலை இருந்தாலும் செஸ் மீதுள்ள ஈடுபாட்டால் விளையாட வந்துள்ளேன். நிதி வசதி இல்லாமல் நாங்களே நிதி திரட்டி செஸ் ஒலிம்பியாட்டுக்காக சென்னை வந்தோம். இங்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை செஸ்சின் மெக்கா என அழைக்கப்படுகிறது. இங்கு செஸ் ஒலிம்பியாட் நடப்பது பொருத்தமானது. நாங்கள் முடிந்தவரை வெற்றி பெற போராடுவோம் என்றார்.

    • முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது.
    • சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இந்திய 'பி' அணியில் இடம் பெற்றுள்ள சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தாலிக்கு எதிரான நேற்றைய 4-வது சுற்று ஆட்டத்தில் 'டிரா' செய்தார். போட்டிக்கு பிறகு அவர் கூறியதாவது:-

    முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 2-வது போட்டியில் வெற்றி பெற்றாலும் நான் ஒழுங்காக விளையாடவில்லை. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் சரியாக விளையாடினால் பதக்கத்தை வெல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ‘பி’ அணி 3-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.
    • இன்று 5-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. ஓபன் பிரிவில் இந்திய ‘பி’ அணி ஸ்பெயினை எதிர் கொள்கிறது.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.

    இந்திய 'ஏ' அணி பிரான்சுடன் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இந்திய 'சி' அணி 1.5-2.5 என்ற கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.

    4 சுற்றுகள் முடிவில் ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி, அர்மெனியா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 5 நாடுகள் தலா 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளன.

    ஆனால் இதில் இந்திய 'பி' அணிதான் போர்டு பாயிண்டில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

    குகேஷ், சரின் நிகில், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ஆகியோரை கொண்ட இந்திய 'பி' அணி 15 போர்டு பாயிண்டுகளை பெற்று உள்ளது.

    இந்திய 'ஏ' அணி 7 புள்ளியுடன் 7-வது இடத்திலும், இந்திய 'பி' அணி 6 புள்ளியுடன் 20-வது இடத்திலும் உள்ளன.

    பெண்கள் பிரிவில் இந்திய அணி 4-வது சுற்றில் அங்கேரியை எதிர் கொண்டது. இதில் இந்திய 'ஏ' அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய 'பி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் எஸ்டோனியாவை தோற்கடித்தது. இந்திய 'சி' அணி 1-3 என்ற கணக்கில் ஜார்ஜியாவிடம் தோற்றது.

    பெண்கள் பிரிவில் 4-வது சுற்றில் முடிவில் அசர்பெய்ஜான், போலந்து, உக்ரைன், இந்திய 'ஏ', பிரான்ஸ், இந்தியா 'பி', ருமேனியா ஆகியவை தலா 7 புள்ளிகளுடன் உள்ளன.

    இன்று 5-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி ஸ்பெயினை எதிர் கொள்கிறது. இந்திய 'ஏ' அணி ருமேனியாவுடனும், இந்திய 'சி' அணி சிலியுடனும் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி பிரான்சுடனும், இந்திய 'பி' அணி ஜார்ஜியாவுடனும் இந்திய 'சி' அணி பிரேசிலுடனும் மோதுகின்றன.

    • செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வயதான வீராங்கனை என்ற பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றுள்ளார்.
    • நேற்றைய 4-வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர்கொண்டார்.

    செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வயதான வீராங்கனை என்ற பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றுள்ளார். மொனக்கா நாட்டை சேர்ந்த அவருக்கு 78 வயதாகிறது. அர்ஜென்டினாவில் பிறந்து அந்நாட்டு அணிக்கு விளையாடி பின்னர் பிரான்ஸ் நாட்டுக்காக ஆடினார். தற்போது மொனாக்காவுக்காக ஆடுகிறார்.

    நேற்றைய 4-வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர்கொண்டார். 70-வது காய் நகர்த்தலுக்கு பிறகு ஜூலியா வெற்றிபெற்று இந்த வயதிலும் சாதித்தார். பின்னர் அவர் கூறும்போது, 'நான் மிகவும் சோர்ந்து விட்டேன். ஆனால் வெற்றிபெற்று விட்டேன். எனது உடல்நலம் காரணமாக சில செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கவில்லை. சென்னை போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

    78 வயதான ஜூலியா பங்கேற்கும் 18-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இதுவாகும்.

    • இத்தாலியின் வோகடுரோவை எதிர்கொண்ட தமிழக வீரர் குகேஷ் 34-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
    • இதேபோல், மகளிர் பி அணியில் எஸ்தோனியா அணி வீராங்கனை நார்வாவை வந்திகா அகர்வால் வீழ்த்தினார்.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது சுற்று ஆட்டம் நடந்தது. இந்த சுற்றிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியில் பங்கேற்ற 6 இந்திய அணியும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 4வது சுற்று ஆட்டம் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் இத்தாலி அணிக்கு எதிராக விளையாடிய தமிழக வீரர் குகேஷ் வெற்றிப்பெற்றுள்ளார். இத்தாலியின் வோகடுரோவை எதிர்கொண்ட தமிழக வீரர் குகேஷ் 34-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

    தொடர்ந்து, ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார். ஜார்ஜியா வீராங்கனையை எதிர்கொண்டபோது 42-வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றியடைந்தார்.

    இதேபோல், மகளிர் பி அணியில் எஸ்தோனியா அணி வீராங்கனை நார்வாவை வந்திகா அகர்வால் வீழ்த்தினார்.

    இத்தாலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா டிரா செய்தார். இத்தாலி வீரர் லோடிசி லோரன்சோவிற்கு எதிராக வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா டிராவில் முடித்தார்.

    • 3 சுற்றுகள் முடிவில் இந்திய ‘பி’ அணி 12 போர்டு பாயிண்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறது.
    • பெண்கள் பிரிவில் பல்கேரி முன்னிலையில் (11.5 போர்டு பாயிண்டில்) உள்ளது.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது சுற்று ஆட்டம் நடந்தது. இந்த சுற்றிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியில் பங்கேற்ற 6 இந்திய அணியும் வெற்றி பெற்றன.

    ஓபன் பிரிவில் இந்தியா 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் சாரீசையும், இந்திய 'பி' அணி 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும், இந்திய 'சி' அணி 3-1 என்ற கணக்கில் ஐஸ்லாந்தையும் தோற்கடித்தன.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தையும், இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் இந்தோனேசியாவையும், இந்திய 'சி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தின.

    3 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி 12 போர்டு பாயிண்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறது. பிரான்ஸ், இஸ்ரேல் 11.5 புள்ளிகளுடன் அடுத்த நிலையில் உள்ளது.

    இந்திய 'ஏ' 10.5 போர்டு பாயிண்டுடன் 6-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 18-வது இடத்திலும் (9.5) உள்ளன.

    பெண்கள் பிரிவில் பல்கேரி முன்னிலையில் (11.5 போர்டு பாயிண்டில்) உள்ளது. இந்திய 'ஏ' 5-வது இடத்தில் (10.5) இருக்கிறது.

    இந்திய 'பி' அணி 16-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 17-வது இடத்திலும் உள்ளது.

    4-வது சுற்று ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்திய 'ஏ' அணி பிரான்சுடனும், இந்திய 'பி' அணி இத்தாலியுடனும், இந்திய 'சி' அணி ஸ்பெயினுடனும் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி அங்கேரியுடனும் 'பி' அணி எஸ்டோனியாவுடனும், 'சி' அணி ஜார்ஜியாவுடனும் மோதுகின்றன.

    • போட்டி ஏற்பாட்டாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.
    • பாலஸ்தீனை சேர்ந்த இளம் வீராங்கனை ராண்டாவை சந்தித்த முதல்வர் கைகுலுக்கி வாழ்த்து.

    சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண அரங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது, போட்டி ஏற்பாட்டாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின் நிறை குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக, உணவு, தங்குமிடங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இதற்கிடையே, பாலஸ்தீனை சேர்ந்த இளம் வீராங்கனை ராண்டாவை சந்தித்த முதல்வர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்ததுடன் நன்றாக விளையாடும்படி கூறினார்.

    ஆய்வின் இறுதியில் நிறைவு விழா குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    ×