search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வப்பெருந்தைனை"

    • கூட்டத்தினர் மத்தியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
    • நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்தார்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு மத்தியில் பேசும்போது, நீலகிரியில் போட்டியிடும் ஆ.ராசாவுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் கூட்டத்தினர் மத்தியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    அப்போது தி.மு.க நிர்வாகிகள், உதயசூரியன் சின்னம் என்பதை நினைவுபடுத்தினர். பின்னர் சுதாரித்து கொண்ட செல்வப்பெருந்தகை, நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்களுக்கு மத்தியில் பேசியதாவது:-

    இந்த நாட்டில் அமைதி நிலவவும், ஜாதி-மத கலவரத்தை தடுத்து நிறுத்தவும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பொறுப்பு உண்டு. அவற்றை எல்லாம் நீங்கள் தடுத்து நிறுத்தி நாட்டை மேன்மைப்படுத்த வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாரோ, அதைவிட 2 மடங்கு அதிகம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

    மேலும் உங்கள் பகுதிக்கு ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு வரஉள்ளார். கொடுப்பவர்களுக்கும், எடுப்பவர்களுக்குமான தேர்தலில் கொடுப்பவராக ராகுல்காந்தியும், எடுப்பவராக மோடியும் உள்ளனர். எனவே திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×