search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார கேடு"

    • பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளன.

    மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    பல்வேறு கடைகளில் ஓரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் அவை அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. காக்களூரில் உள்ள மதுக் கடை அருகே பிளாஸ்டிக் கப் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்படாமல் மாதக்கணக்கில் குவியல், குவியலாக உள்ளன. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் சேர்ந்து விடுவதால் கடும் சவாலாக மாறி உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான மீன் கடைகள் உள்ளது.
    • இந்த மீன் கடைகளுக்கு தேவை யான மீன்கள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான மீன் கடைகள் உள்ளது. இந்த மீன் கடைகளுக்கு தேவை யான மீன்கள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த கண்டெய்னர் லாரிகளை, பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பாலத்தில் பல மணி நேரம் நிறுத்தி விடுகின்றனர். அப்போது கண்டெய்னர் லாரியின் உள்ளே இருந்து வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் துர்நாற்றத்துடன் பரவலாக தேங்கி விடுகிறது.

    மேலும் கண்டெய்னர் லாரியிலிருந்து இறக்கப்பட்ட மீன் பெட்டியும் வரிசையாக அடுக்கி வைக்கப்படுவ தாலும், துர்நாற்றம் வீசுகிறது. அந்த சமயத்தில் வாகனத்தில் செல்வோர்கள் மிகவும் அவதிப் படுகின்ற னர். மேலும் போக்கு வரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது.

    இது குறித்து முன்னாள் கவுன்சிலர் செல்வம், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நகராட்சி சேர்மன், துணை சேர்மனிடம் புகார் தெரிவித்தார்.

    ×