search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Hazards"

    • பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளன.

    மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    பல்வேறு கடைகளில் ஓரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் அவை அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. காக்களூரில் உள்ள மதுக் கடை அருகே பிளாஸ்டிக் கப் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்படாமல் மாதக்கணக்கில் குவியல், குவியலாக உள்ளன. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் சேர்ந்து விடுவதால் கடும் சவாலாக மாறி உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×