search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவபூஜை மலர்கள்"

    • சிவனை பத்துக்கோடி மலர்களால் அர்ச்சிப்பவன் ராஜயோகம் அடைவான்.
    • லட்சம் கருஊமத்தை அர்ச்சிப்பின் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    சிவனை பத்துக்கோடி மலர்களால் அர்ச்சிப்பவன் ராஜயோகம் அடைவான்.

    ஐந்துகோடி மலர்களால் அர்ச்சித்தால் முக்தி பெறுவான்,

    ஒரு கோடி மலர்களால் அர்ச்சித்தால் ஞானம் பெறுவான்.

    அரைக்கோடி மலர்களால் அர்ச்சித்து மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஐந்து லட்சம் ஜபித்தால் சிவன் பிரத்யட்மாவான், லட்சம் அருகம்புல் அர்ச்சித்தால் நீண்ட ஆயுள் ஏற்படும்.

    லட்சம் கருஊமத்தை அர்ச்சிப்பின் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    லட்சம் கரவீர புஷ்பத்தால் அர்ச்சிப்பின் சர்மராகங்கள் நிவர்த்தியாகும். லட்சம் மல்லிகை அர்ச்சிப்பின் அழகிய மனைவி கிடைப்பாள்.

    ஐம்பதினாயிரம் மலர்களால் அர்ச்சித்தால் ரோகம் நிவர்த்தியாகும். பன்னீராயிரத்து ஐந்தூறு மலர்களால் அர்ச்சிப்பின் கல்வி, கேள்விகளில் சிறந்தவனாவான்.

    பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க சத்ருபயம் நீங்கப் பெறுவான் என்று சிவபுராணம் கூறுகிறது.

    • ஐப்பசியில் தும்பையினால் அர்ச்சனை செய்யலாம்.
    • ஐப்பசியில் அன்னத்தினால் சிவபூஜை செய்திட நன்மை பெருகும்

    சித்திரை - பலாசம்,

    வைகாசி- புன்னை,

    ஆனி- வெள்ளெருக்கு,

    ஆடி- அரளி,

    ஆவணி- செண்பகம்,

    புரட்டாசி- கொன்றை,

    ஐப்பசி- தும்பை,

    கார்த்திகை- கத்திரி,

    மார்கழி-பட்டி,

    தை-தாமரை,

    மாசி-நீலோத்பலம்,

    பங்குனி- மல்லிகை.

    மாதப் பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்பவன் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடைவான்.

    சித்திரை-மரிக்கொழுந்து, வைகாசி- சந்தனம், ஆனி-முக்கனிகள், ஆடி-பால், ஆவணி- நாட்டுச் சர்க்கரை, புரட்டாசி- அப்பம், ஐப்பசி- அன்னம், கார்த்திகை-தீபவரிசை, மார்கழி- நெய், தை- கருப்பஞ்சாறு, மாசி- நெய்யில் நனைத்த கம்பளம், பங்குனி-கெட்டித் தயிர்.

    ×