search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன் சக்தி"

    • நான் அருகில் இருக்கும்போது நீங்கள் எப்படி தியானம் செய்ய முடியும்?’’ என்று கேட்கிறாள்.
    • பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அறிவு, ஆற்றலோடு ஞானம், பக்குவம், விவேகம் உடையவர்களாய் இருக்க வேண்டும்.

    தெய்வத்தையே தாயாக நினைக்கும்போது, தன் குழந்தைகளைக் காக்க அவள் பூமிக்கு வந்து விடுகிறாள்.

    பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அறிவு, ஆற்றலோடு ஞானம், பக்குவம், விவேகம் உடையவர்களாய் இருக்க வேண்டும்.

    வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க அதுவே முக்கியம். அந்த ஞானத்தை அள்ளி வழங்குபவள் அகிலாண்டேஸ்வரி.

    ஒருமுறை ஈசன் யோக நிஷ்டையில் அமர முடிவு செய்தார்.

    உலகில் நீதி நெறி தவறி, அக்கிரமம் எங்கும் தலை விரித்தாடியது.

    மனிதர்களை நல்வழிப்படுத்த, ஈசன் நிஷ்டையில் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமரும்போது அம்பிகை வருகிறாள்.

    நான் அருகில் இருக்கும்போது நீங்கள் எப்படி தியானம் செய்ய முடியும்?'' என்று கேட்கிறாள்.

    அவள் குரலில் ஏளனம். ஈசன் உலக நன்மைக்காக அம்பிகையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார்.

    "தேவி! ஆம்... நீ சொல்வது சரியே. எனவே நீ பூமிக்குச் சென்று உன் குழந்தைகள் ஞானம் பெறத் தியானம் செய்.

    என் பக்தன் ஜம்பு என்பவன் நாவல் மரமாக இருக்கிறான்.

    அங்கு சென்று நீ தவம் செய். நான் உனக்கு உபதேசம் செய்கிறேன். அங்கு நாம் குரு சிஷ்யை என்ற முறையில் திகழ்வோம் என்கிறார்.

    அவரின் உத்தரவை ஏற்று அன்னை பூமிக்கு வருகிறார். திருவானைக்காவில் காவிரி நதியில் நீர் எடுத்து லிங்கம் அமைத்து ஈசனை வழிபடுகிறார்.

    புராண காலத்தில் இத்தலம் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.

    அதில் ஒரு மரத்தடியில் ஜம்பு என்னும் முனிவர் ஈசனை நினைத்து தவம் இருந்தார்.

    இறைவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழம் பிரசாதமாகக் கொடுத்தார்.

    இறைவன் அளித்தது என்று முனிவர் விதையையும் சேர்த்து விழுங்கி விட்டார்.

    விதை வயிற்றுக்குள் வளர்ந்து கிளைகள் தலைக்கு மேல் பரவ, சிரசு வெடித்து முனிவர் முக்தி அடைந்தார். எனவே இறைவன் "ஜம்புகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    அகிலத்தைக் காக்க அம்பிகை தவம் இருந்ததால் "அகிலாண்டேஸ்வரி' என்று அழைக்கப்படுகிறாள்.

    • திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர். அதுவே ஆருத்ரா என மாறியது.
    • பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.

    திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர்.

    அதுவே ஆருத்ரா என மாறியது.

    அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான சேந்தனார் என்பவர் அரசபதவியிலிருந்து சிவனின் திருவிளையாடலால் ஏழையாகினாலும் தன்னுடைய சிவத்தொண்டான அடியவருக்கு உணவளிக்காமல், தான் உண்பதில்லை என்ற கொள்கையிலிருந்து மாறாமல் இருந்தார்.

    கடும் வறுமையில் வாழ்ந்து வந்தபோது, ஒரு மழைநாளில் சமைக்க ஏதுமில்லாதபோதும், கோலமிட வச்சிருந்த பச்சரிசி மாவில், சிறிதளவு வெல்லம் சேர்த்து களியாய் கிளறி அடியவருக்காக காத்திருந்தனர்.

    இரவுப்பொழுது ஆகியும் யாரும் வராததால் பசியோடு உறங்க சென்றனர்.

    இதனால், சிவனே அடியவர் வேடம் போட்டு சேந்தனார் வீட்டு வாயிலில் நின்று பிச்சை கேட்டார்.

    அவருக்கு களி பரிமாறி பசியாத்தினர் சேந்தனார் தம்பதியினர்.

    களி மிக ருசியாயுள்ளது என சொல்லி நாளைக்கும் வேண்டுமென கூறி மிச்சம் மீதி களியையும் பெற்று சென்றார்.

    மறுநாள் கோவிலில் சென்று இறைவனை காணும்போது, கருவறையில், முதல் நாள் அடியவருக்கு கொடுத்தனுப்பிய களி அங்கு சிதறி இருந்தது.

    அப்படி சேந்தனார், களியமுது படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளாகும்.

    அன்றிலிருந்து, ஆருத்ரா தரிசனம் நாளன்று களி சமைத்து படைப்பது வழக்கமாகிவிட்டது.

    களின்ற வார்த்தைக்கு உணவு பண்டம்ன்னு மட்டும் பொருள் இல்லை.

    களின்னா ஆனந்தம்ன்னும் பொருள் தரும்.

    அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும்.

    சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் திருவாதிரைக்களி நிவேதனம் செய்விக்கப்படுகிறது.

    இந்த ஆருத்ரா தரிசன நாளில்தான், மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதி முடித்தார்.

    கேரளத்தில் இந்நாளை ஈசன் காமனை எரித்த நாளாக கொண்டாடுகின்றனர்.

    பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.

    அதனால்தான், இந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டால் சிறந்த கணவன் கிடைக்கும், தாலிபலம் கூடும்.

    பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்வர்.

    • விஷத்தினை தடுத்து வாழ்வினை அமுதமாக்கியதால் தாய் அமுதாம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.
    • அபகரணம் என்றால் ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும்.

    அபகரணம் என்றால் ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும்.

    விஷத்தை ஏற்றுக்கொண்டதால் விஷாபகரண மூர்த்தி என்று அழைக்கப்பட்டார்.

    அப்படி ஈஸ்வரன் விஷத்தினை அருந்தியபோது லோக மாதவான புவனேஸ்வரி பரமனின் கண்டத்தினைப் பற்றி விஷம் உள்ளே செல்லாதவாறு தடுத்து கண்டத்தினிலேயே அடக்கி விடுகிறார்.

    விஷத்தினை தடுத்து வாழ்வினை அமுதமாக்கியதால் தாய் அமுதாம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.

    பொருந்தியமுப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால்

    வருந்திய மருங்குல் மனோன்மணி வார்சடையோன்

    அருந்திய நஞ்(சு) அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்

    திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!

    என்று அபிராமி அந்தாதியில் அபிராமப்பட்டர் குறிப்பிடுகிறார்.

    அன்று முதல் சதாசிவனுக்கு திருநீலகண்டன், ஸ்ரீகண்டர், விஷாபரணர், நஞ்சுண்டேஸ்வரன், காளகண்டன் என்றும் போற்றப்படுகிறார்.

    திருநீலகண்ட வடிவச் சிறப்புப்பற்றி கம்பநாடர்,

    "கார்விடக் கறையுடை கணிச்சி வானவன்

    வார்சடைப் புடையின் ஓர்மதி, மிலைச்சதான்

    சூர் சுடர்க் குலமெலாம் சூடினான் என

    வீர பட்டத்தொரு திலகம் மின்னலே!"

    என்று மிக அழகாக பாடி உள்ளார்.

    சரபோப நிஷத்தில்

    பபேதோ ஹாலாஹலம் தந்தம்!

    தஸ்மை ருத்ராய நமோ அஸ்து!!

    (ஆலகால விஷத்தை அருந்திய ருத்ரனுக்கு நமஸ்காரம்) என்று கூறுகிறார்.

    "கால கூட விஷதாரணே நீலக்வர்ணக்ரீவா யஸ்ய அஸெள நீலக்ரீவ!"

    என்று தைத்ரிய சம்ஹிதையில் விஷத்தை உண்பதனால் நீலவர்ணக் கழுத்து ஈஸ்வரனுக்கு உண்டாயிற்று என்று கூறுகிறது.

    இப்படி விஷம் அருந்தி கண்டத்தில் தங்கி இருந்ததால் திருநீலகண்டரானார் விஸ்வேஸ்வரன்.

    ஏகாதசி அன்று பாற்கடலை கடையத்துவங்கி, துவாசியன்றும் தொடர்ந்து, திரயேதசி அன்று ஆலகால விஷம் அருந்திய ஈஸ்வரன் அனைத்து உலகினையும் காத்து தேவர்களை திருப்திபடுத்த மாலையும், இரவும் இணையும் நேரமான பிரதோஷ காலத்தில் சிவபெருமானின் சிவகணங்களுக்கு தலைவராக விளங்கும் நந்தி தேவரின் இரு கொம்புகளிடையே நடனமாடி ஆனந்த கூத்தாடுகிறார்.

    இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாள் சனிக்கிழமையாகும்.

    அதனாலேயே சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தினை சனி மகாப்பிரதோஷ தினமாக கருதப்படுகிறது.

    பிரதோஷ தினங்களில் நந்தி தேவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

    பிரதோஷ வழிபாட்டின் போது நந்திதேவரை வணங்கினால்தான் சிவன் அருளை முழுமையாக பெற முடியும்.

    நந்தியை வணங்கினால் ஈடற்ற பலன்களை பெறலாம் என்று சிவபெருமானே அருளாசி வழங்கி உள்ளார்.

    ×