search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைக்கு மாலை"

    • சதயவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தனர்.
    • மாற்று திறனாளி மாணவனை ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க செய்து ஆசையை நிறைவேற்றி வைத்தார்

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நேற்று சதயவிழாவை முன்னிட்டு மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி, இயக்கம், அமைப்பு, தன்னார்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அப்போது தஞ்சை அழகிக்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவர் ஆரவ் அமுதன் (19) மாலை அணிவிப்பதற்காக வந்தார்.

    ஆனால் அவரை சில போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதிக்கவில்லை.

    அனைத்து அமைப்பினரும் மாலை அணிவித்த பிறகு மாலை அணிவிக்க வேண்டும் என கூறி திருப்பி அனுப்பினர்.

    இதனால் மாணவர் ஆரவ் அமுதன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

    இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதனை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அந்த மாற்றுத்திறனாளி வாலிபரை அழைத்து வர நடவடிக்கை எடுத்தார்.

    மேலும் இந்த தகவல் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    உடனே அவர் மாணவர் ஆரவ்அமுதனை அழைத்து வந்து உதவிக்கரங்களோடு ஏற்றி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க செய்து ஆசையை நிறைவேற்றி வைத்தார்.

    தொடர்ந்து அவரிடம் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தி ஊக்கப்படுத்தினார்.

    பதிலுக்கு மாணவரும் மேயருக்கு மனமார்ந்த நன்றி கூறினார்.

    போலீசாரும் மாணவரை பாராட்டி ஊக்கப்படுத்தி காவல்துறை உங்கள் நண்பன் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்றப்படி செயல்பட்டனர்.

    மேயர் மற்றும் போலீசாரின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

    • அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
    • எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவிற்கு, நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    இதில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர் நாகராஜ், ஐ.டி. பிரிவு மண்டல துணை செயலாளர் ராஜசேகர், ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல் உள்பட பலர் பங்கேற்றனர்.

    கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவிற்கு, நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாரி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    • மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மதுரை

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் உள்ள கட்டப்பொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, கே.டி. ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் அய்யப்பன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் ராமமூர்த்தி, வி. கே. எஸ். மாரிச்சாமி, முருகேசன்,முனியசாமி, முத்து இருளாண்டி, செந்தில் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) சார்பில் கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அய்யப்பன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் ராமமூர்த்தி, வி.கே.எஸ். மாரிச்சாமி, முருகேசன், முனியசாமி, முத்து இருளாண்டி, செந்தில், முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி. ஆர்.ராஜ்மோகன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலை பிரபு, ஆட்டோ கருப்பையா, கொம்பையா,கண்ணன், உசிலை சசிகுமார், சோலை இளவரசன், பிரபாகர், சுந்தரா, குருசாமி, கார்த்திகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    கட்டபொம்மன் சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் பூமிநாதன் எம்.எல்.ஏ. உள்ளார்.

    ம.தி.மு.க. சார்பில் மதுரையில் உள்ள கட்ட பொம்மன் சிலைக்கு துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பூமிநாதன் எம்.எல்.ஏ., சுருதி ரமேஷ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை யொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


    திருமங்கலத்தில் தி.மு.க. சார்பில் கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட்ட பொம்மன் உருவப்படத்திற்கு அவைத்தலைவர் நாக ராஜ் தலைமையில் நகர செயலாளர் ஸ்ரீதர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், இளைஞரணி மதன்குமார், கவுன்சிலர்கள் திருகுமார், வீரகுமார், முருகன், வினோத், சரண்யா ரவி, கவுதம் ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • இதனைத்தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர்.

    திருமங்கலம்

    பெரியாரின் 144-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி திருமங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தி.மு.க. வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்து ராமலிங்கம், சாமிநாதன், நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகர சபை தலைவர் ரம்யா முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ராமமூர்த்தி, ஜெயசந்திரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், அணி அமைப்பாளர்கள் மதன், பாசபிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதிமுக சார்பில் நகர செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர். இதில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சதீஷ்சண்முகம், நிர்வாகிகள் பாண்டி, சிவனாண்டி, உச்சப்பட்டி செல்வம், வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் வைரன், ம.தி.மு.க. நகர செயலாளர் அனிதா பால்ராஜ், அவைத்தலைவர் சிவனாண்டி, பொருளாளர் முருகன், இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜகோபால், நகர துணை செயலாளர் மாரிசாமி, விவசாய அணி துணைச் செயலாளர் காசி ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ×