search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சிலைக்கு மாலை
    X

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர், படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சிலைக்கு மாலை

    • அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
    • எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவிற்கு, நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    இதில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர் நாகராஜ், ஐ.டி. பிரிவு மண்டல துணை செயலாளர் ராஜசேகர், ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல் உள்பட பலர் பங்கேற்றனர்.

    கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவிற்கு, நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாரி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    Next Story
    ×