search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா பாடல்"

    • செல்போன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே கூட தற்போது தகராறு ஏற்பட்டு வருகின்றன.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் நவீன காலத்தில் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்த நேரத்திலும் செல்போனோடு தான் பொழுதை கழிக்கிறார்கள்.

    செல்போன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே கூட தற்போது தகராறு ஏற்பட்டு வருகின்றன.

    சினிமா பாடல் கேட்பதற்காக செல்போன் கேட்ட கணவர் கண்ணை மனைவி குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஹவுசிங் டெவலப்மென்ட் காலனியை சேர்ந்தவர் அங்கித். இவருடைய மனைவி பிரியங்கா. வீட்டில் இருந்த பிரியங்கா செல்போனில் சினிமா பாடல் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அங்கித் மனைவியிடம் தான் பாடல் கேட்க வேண்டும் என கூறி செல்போனை கேட்டார்.

    அப்போது பிரியங்கா நான் இன்னும் சில பாடல்களை கேட்க வேண்டும். அதனால் செல்போனை தர முடியாது என தெரிவித்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

    ஆத்திரமடைந்த பிரியங்கா வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அங்கித்தின் கண்ணில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அங்கித் தனது மனைவி பிரியங்கா மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×