search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கன் சமையல்"

    • காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சிக்கன் போண்டா.
    • சிக்கன் போண்டாவை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் கைமா – கால் கிலோ,

    சின்ன வெங்காயம் – 50 கிராம்,

    போண்டா மாவு – 250 கிராம்,

    சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,

    மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் – 2,

    பூண்டு – 5 பல்,

    கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,

    சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,

    மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,

    தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,

    பொட்டுக்கடலை – 50 கிராம்,

    இஞ்சி – 2 சிறிய துண்டு,

    கொத்தமல்லித் தழை – சிறிதளவு.

    உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை:

    * சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.

    * அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.

    * முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

    * அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    * சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.

    • சிக்கனில் பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம்.
    • மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கன் சமோசா செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது )

    கொத்தமல்லி தழை - சிரிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    மைதா - 3 கப்

    உப்பு - தேவையான அளவு

    பச்சை மிளகாய் - 4

    கரம் மசாலா - 1 ஸ்பூன்

    வேகவைத்த பட்டாணி - ½ கப்

    பெரிய வெங்காயம் - 1

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.

    * பின்னர் வேக வைத்த பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    * மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி போல் திரட்டி முக்கோண வடிவில் செய்து அதில் செய்து வைத்த சிக்கன் கலவையை போட்டு ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக மூடி விடவும். இவ்வாறு இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான சிக்கன் சமோசா ரெடி.

    • சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கோழி சூப் குடிப்பது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    நாட்டுக்கோழி - 1/4 கிலோ

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 1/4 கப்

    தக்காளி - 1

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    தண்ணீர் - 2 கப்

    கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு சுவைக்கேற்ப

    தாளிப்பதற்கு...

    நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    பட்டை - 1/2 இன்ச்

    ஏலக்காய் - 1

    கிராம்பு - 1

    கறிவேப்பிலை - சிறிது

    அரைப்பதற்கு...

    மல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 3

    தண்ணீர் - சிறிது

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்த பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

    அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும்.

    குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்!

    ×