search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகிச்சை பெற்று வந்த"

    • சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநில த்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு செல்வ தற்கு குறைந்த தூரம் என்பதாலும் வளைவுகள் குறைவு என்பதாலும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்ப டுத்தி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடகா மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து தர்பூசணி பாரம் ஏற்றிக்கொண்டு பர்கூர் வழியாக வந்து கொண்டிருந்தது.

    இதில் 6 பேர் பயணம் செய்தார்கள். தொடர்ந்து வரட்ட பள்ளம் அணை வளைவு பகுதியில் சரக்கு வாகனம் வந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

    இதில் சென்னம்பட்டி சனிசந்தை சித்தகவண்ட னூர், மாரியப்பன் (47) பழனியம்மாள் (44) ராமாயி (45) செவன் (48) மாரிமுத்து (49) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    கேரளா மாநிலம் திரு ச்சூர் மாவட்டம் கொடுங்க ல்லூர் ரியாஸ் (34) ஓட்டுன ருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    மேலும் சென்னம்பட்டி பூனர் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்கின்ற குமார் (45) கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சண்முகம் என்கின்ற குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • ஹைருன்னிசா வெளியில் சென்று விட்டு வரும்போது கீழே விழுந்து விட்டார்.
    • இதில் அவரது கண் புருவத்தில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் ஹைருன்னிசா (57). இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ஹைருன்னிசா கடந்த மாதம் வெளியில் சென்று விட்டு வரும்போது அப்பகு தியில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் கீழே விழுந்து விட்டார்.

    இதில் அவரது கண் புருவத்தில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது. பின்னர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    அதன்பின் ஹைருன்னிசா உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை மீண்டும் ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹைருன்னிசா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அலாவூதீன் (38) அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×