search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident died"

    • சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநில த்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு செல்வ தற்கு குறைந்த தூரம் என்பதாலும் வளைவுகள் குறைவு என்பதாலும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்ப டுத்தி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடகா மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து தர்பூசணி பாரம் ஏற்றிக்கொண்டு பர்கூர் வழியாக வந்து கொண்டிருந்தது.

    இதில் 6 பேர் பயணம் செய்தார்கள். தொடர்ந்து வரட்ட பள்ளம் அணை வளைவு பகுதியில் சரக்கு வாகனம் வந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

    இதில் சென்னம்பட்டி சனிசந்தை சித்தகவண்ட னூர், மாரியப்பன் (47) பழனியம்மாள் (44) ராமாயி (45) செவன் (48) மாரிமுத்து (49) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    கேரளா மாநிலம் திரு ச்சூர் மாவட்டம் கொடுங்க ல்லூர் ரியாஸ் (34) ஓட்டுன ருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    மேலும் சென்னம்பட்டி பூனர் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்கின்ற குமார் (45) கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சண்முகம் என்கின்ற குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    ×