search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகரெட் நிறுவனம் ஊழியர்"

    • வாக்காளர்களுக்கான பட்டுவாடாவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
    • மேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர்.

    மேலூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாக்காளர்களுக்கான பட்டுவாடாவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக போலீசாருடன் இணைந்து தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் வாகன சோதனை மற்றும் தணிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கொடிமலர் ஆகியோர் தலைமையில் தலைமை காவலர்கள் அலாவுதீன், கார்த்திக் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் மேலூரில் உள்ள தனியார் சிகரெட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் சரவணன் என்பவர் சிகரெட் விற்பனை செய்து பல்வேறு கடைகளில் வசூல் செய்த ரொக்கம் ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்து 400-ஐ கொண்டு வந்தது தெரியவந்தது.

    ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர். அவர் உத்தரவின் பேரில் அந்த பணம் சரி பார்க்கப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    ×