search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சான்ட்ரோ"

    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்த புத்தம் புதிய சான்ட்ரோ கார் 23,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். #HyundaiSantro



    ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டது. புதிய ஹூன்டாய் சான்ட்ரோ ரூ.3.89 லட்சம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், டாப்-என்ட் வேரியன்ட் விலை ரூ.5.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் அக்டோபர் 10ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் புத்தம் புதிய சான்ட்ரோ கார் இதுவரை 23,500க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் புதிய ஹூன்டாய் சான்ட்ரோ வாங்குவோர் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    மேலும் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் புதிய சான்ட்ரோ மாடல்களில் 30 சதவிகிதம் AMT வேரியன்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்ட்ரோவின் AMT வேரின்ட் மிட்-ரேஞ்ச் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரின்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய காரின் மீது எழுந்துள்ள வரவேற்பை வைத்து பார்க்கும் போது காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018 மாடலில் முந்தைய சான்ட்ரோ கார் போன்ற டால்பாய் வடிவமைப்பைத் தழுவி முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்பக்கம் கேஸ்கேடிங் கிரில், குரோம் இன்சர்ட், ஸ்பெவ்ப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், முன்பக்கம் கிரில், ஃபாக் லேம்ப்கள் மற்றும் புதிய பம்ப்பரை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் கொண்டுள்ளது.



    புதிய சானட்ரோ கார் டைஃபூன் சில்வர், போலார் வைட், ஸ்டார்டஸ்ட், இம்பீரியல் பெய்க், மரீனா புளுஷ ஃபியரி ரெட் மற்றும் டையானா கிரீன் என ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. 2018 சான்ட்ரோ காரின் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் பிளாக் மற்றும் பெய்க் என டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

    ஹூன்டாய் சான்ட்ரோ காரில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் மிரர்லின்க் போன்ற வசதிகள் வழங்கப்ட்டுள்ளன. இத்துடன் மின்சார முறையில் மாற்றக்கூடிய ORVMகள், மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. போர்ட், மடிக்கக்கூடிய பின்புற இருக்கைகள், பின்புற வைப்பர் மற்றும் வாஷர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018 மாடலில் டிரைவர் ஏர்பேக், ABS, EBD மற்றும் என்ஜின் இம்மொபைலைசர் வழங்கப்பட்டுள்ளது. சான்ட்ரோ டாப்-என்ட் மாடலில் பாசென்ஜர் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கேமரா, ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பின்புற டீஃபாகர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஹூன்டாய் முதல் முறையாக வழங்கி இருக்கிறது. இத்துடன் புதிய சான்ட்ரோ CNG வசதியும் கொண்டுள்ளது. 
    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 சான்ட்ரோ கார் வெளியிடப்பட்டது. #Santro



    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய சான்ட்ரோ கார் மாடலை இந்தியாவில் வெளியிட்டது. புதிய ஹூன்டாய் சான்ட்ரோ துவக்க விலை ரூ.3.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஹூன்டாய் சான்ட்ரோவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது. புதிய சான்ட்ரோ கார்: டிலைட், இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என ஐந்து வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    இதன் டிலைட் வேரியன்ட் ரூ.3.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டாப்-என்ட் ஆஸ்டா வேரியன்ட் விலை ரூ.5.45 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சான்ட்ரோ கார் AMT கியர்பாக்ஸ் மற்றும் CNG ஃபியூயல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.



    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018 மாடலில் முந்தைய சான்ட்ரோ கார் போன்ற டால்பாய் வடிவமைப்பைத் தழுவி முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்பக்கம் கேஸ்கேடிங் கிரில், குரோம் இன்சர்ட், ஸ்பெவ்ப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், முன்பக்கம் கிரில், ஃபாக் லேம்ப்கள் மற்றும் புதிய பம்ப்பரை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் கொண்டுள்ளது.

    புதிய சானட்ரோ கார் டைஃபூன் சில்வர், போலார் வைட், ஸ்டார்டஸ்ட், இம்பீரியல் பெய்க், மரீனா புளுஷ ஃபியரி ரெட் மற்றும் டையானா கிரீன் என ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. 2018 சான்ட்ரோ காரின் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் பிளாக் மற்றும் பெய்க் என டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

    ஹூன்டாய் சான்ட்ரோ காரில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் மிரர்லின்க் போன்ற வசதிகள் வழங்கப்ட்டுள்ளன. இத்துடன் மின்சார முறையில் மாற்றக்கூடிய ORVMகள், மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. போர்ட், மடிக்கக்கூடிய பின்புற இருக்கைகள், பின்புற வைப்பர் மற்றும் வாஷர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018 மாடலில் டிரைவர் ஏர்பேக், ABS, EBD மற்றும் என்ஜின் இம்மொபைலைசர் வழங்கப்பட்டுள்ளது. சான்ட்ரோ டாப்-என்ட் மாடலில் பாசென்ஜர் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கேமரா, ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பின்புற டீஃபாகர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஹூன்டாய் முதல் முறையாக வழங்கி இருக்கிறது. இத்துடன் புதிய சான்ட்ரோ CNG வசதியும் கொண்டுள்ளது. 
    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் புதிய சான்ட்ரோ மாடல் காரை விரைவில் வெளியிட இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro



    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் புதிய சான்ட்ரோ மாடல் காரை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய 2018 ஹூன்டாய் சான்ட்ரோ மாடல் இந்தியாவில் அக்டோபர் 23-ம் தேதி வெளியாக இருக்கிறது. 

    அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் புதிய சான்ட்ரோ மாடலின் விலை இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன் படி புதிய சான்ட்ரோ பேஸ் வேரியன்ட் விலை ரூ.3.87 லட்சம் துவங்கி, டாப் என்ட் மாடலின் விலை ரூ.5.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்படுகிறது. 

    புதிய சான்ட்ரோ 2018 மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 98 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. AMT கியர்பாக்ஸ் சான்ட்ரோ பெறும் முதல் ஹூன்டாய் கார் மாடலாக இருக்கிறது.


    புகைப்படம் நன்றி: Gaadiwaadi.Com

    ஹூன்டாய் நிறுவனம் 1.1 இன்ஜினில் புதிய சான்ட்ரோ CNG வேரியன்ட் வழங்கப்படுகிறது. சான்ட்ரோ CNG வேரியன்ட் செயல்திறன் சற்று குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சான்ட்ரோ CNG வேரியன்ட் 58 பி.ஹெச்.பி. பவர், 84 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. 

    புதிய சான்ட்ரோ பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிலோமீட்டர், CNG வேரியன்ட் 30.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. காரின் உள்புறத்தில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, மிரர் லின்க் மற்றும் குரல் அங்கீகார வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.
    ஹூன்டாய் நிறுவனத்தின் AH2 கார் இந்தியாவில் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்ட நிலையில், இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Hyundai



    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடலின் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. புதிய ஹூன்டாய் கார் AH2 என்ற பெயரில் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஹூன்டாய் AH2 கார் சான்ட்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் அதிக பிரபலமான பிரான்டாக விளங்கிய சான்ட்ரோ கார் புதிய அம்சங்களுடன் மீண்டும் வெளியிடப்படலாம் என்றும், இந்த கார் மாருதி சுசுகி ஆல்டோ K10, ரெனால்ட் க்விட், டாடா டியாகோ மற்றும் மாருதி சுசுகி செலரியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    ஹூன்டாயின் புதிய கார் கிரான்ட் i10 மாடலுக்கு கீழ் நிலைநிறுத்தப்பட்டு, தற்போதைய இயான் மாடலுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த காரின் வரைபடத்தை ஹூன்டாய் வெளியிட்டது, அதன்படி கார் கூர்மையான வடிவமைப்பு மற்றும் சற்றே வளைந்திருக்கும் ரூஃப்லைன் மற்றும் கம்பீரமான ஷோல்டர் லைன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.



    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஹூனடாய் சான்ட்ரோ மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய ஹேட்ச்பேக் இயான் மாடலுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. புதிய காரின் கேபின் பல்வேறு அம்சங்களுடன் பிரீமியம் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் BS-VI எமிஷன் மற்றும் AMT யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    உள்புறம் ஹூன்டாய் மாடலில் டூயல்-டோன் வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த உபகரணங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய காரில் வசதியான இருக்கைகள், கால் வைக்கும் வசதி மற்றும் ஹெட்ரூம் வழங்கப்படுகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மல்டி-இன்ஃபர்மேஷன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட இருக்கிறது. #Hyundai
    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய காரின் பெயர் அக்டோபர் 4-ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Hyundai #Santro


    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கார் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன்படி அக்டோபர் 4-ம் தேதி அந்நிறுவனத்தின் சிறிய ஹேட்ச்பேக் பெயர் அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் மாத இறுதியில் இந்த கார் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    ஹூன்டாய் நிறுவனம் தனது சான்ட்ரோ மாடலை புதுப்பொழிவுடன் மீண்டும் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கார் சான்ட்ரோ என பெயரிடப்பட்டு கூடுதலாக முந்தைய மாடல்களை போன்றே சிங் என்ற வார்த்தை சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் அடுத்த மாத வாக்கில் ஹூன்டாய் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களிடம் புதிய காரின் பெயரை வழங்கலாம். இந்தியாவில் சான்ட்ரோ பிரான்டு அதிகம் பிரபலமான மாடலாக இருந்தது. 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அதிக பிரபலமாக இருந்த சான்ட்ரோ, பின்னர் ஹூன்டாய் i10 மாடல் அறிமுகமானதும் சான்ட்ரோ விற்பனை குறைந்தது.



    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஹூனடாய் சான்ட்ரோ மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய ஹேட்ச்பேக் இயான் மாடலுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. புதிய காரின் கேபின் பல்வேறு அம்சங்களுடன் பிரீமியம் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் BS-VI எமிஷன் மற்றும் AMT யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    உள்புறம் ஹூன்டாய் மாடலில் டூயல்-டோன் வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த உபகரணங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய காரில் வசதியான இருக்கைகள், கால் வைக்கும் வசதி மற்றும் ஹெட்ரூம் வழங்கப்படுகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மல்டி-இன்ஃபர்மேஷன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட இருக்கிறது. #Hyundai #Santro 
    ×