search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரிபார்ப்பு பணி"

    • சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பதரார்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறினால் அவர்களின் தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படும்.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகள், 3 பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை மே மாதம் முதல் ஜூன் வரை நடந்தது.

    சுமார் 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், முதற்கட்ட நகர்வின் முடிவுகள் கடந்த 4ம் தேதி பல்கலை.யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தங்களின் பயனர் ஐடி மற்றம் பாஸ்வேர்ட் பயன்படுத்தி தங்களின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    மேலும், 1,732 விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (7ம் தேதி) பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடி மற்றும் அலைபேசி எண்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், விண்ணப்பதரார்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறினால் அவர்களின் தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படும்.

    இந்த கல்வியாண்டில் கல்லூரி திறக்கப்படும் தேதி, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாக மாணவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 0422-6611346, 94864-25076, 94886-35077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள சுருக்க முறை திருத்தத்துக்கான முந்தைய திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கின.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.

    திருப்பூர்:

    வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. வரும் நவம்பரில் சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2024 ஜனவரி மாதம் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இது, தேர்தலுக்கான பட்டியலாக அமையும்.

    நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள சுருக்க முறை திருத்தத்துக்கான முந்தைய திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கின. வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கின்றனர்.

    இப்பணியில் ஈடுபட உள்ள 2,513 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர்களால் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பி.எல்.ஓ., ஆப் என்கிற மொபைல் செயலியில் உள்ள ஹவுஸ் டூ ஹவுஸ் என்கிற வசதியை பயன்படுத்தி சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    குறிப்பிட்ட முகவரியில் வாக்காளர் வசிக்கிறாரா, வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படம் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளனவா; இளம் வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெற்றதா என ஆய்வு செய்யப்படும். மேலும், புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது.

    • தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது நடந்தது.
    • மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முதல் நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெறுவதையும், மாதிரி வாக்குப் பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    தருமபுரி, 

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் ஆணைப்படி எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024-ன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி தலைமையில் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் நடை பெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது BEL பொறியாளர்களால் கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தருமபுரி மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் தொடங்கப்பட்டது.

    இப்பணியானது தொடர்ந்து ஒருமாத காலம் நடைபெற உள்ளது. இப்பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முதல் நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெறுவதையும், மாதிரி வாக்குப் பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) அசோக்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×