search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Verification work"

    • 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
    • 72.21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 5ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்களில் பெறப்பட்ட 3,00,880 விண்ணப்பங்களில் 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா பொம்மைய கவுண்டன்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 517 ரேசன் கடைகள் உள்ளன. அவற்றில் 4,32,038 குடும்ப அட்டைகள் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல் கட்டமாக பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் வட்டத்தில் 24.07.2023 முதல் 4.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 1,49,188 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    2ம் கட்டமாக தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் போடி வட்டத்தில் 05.08.2023 முதல் 11.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 1,33,646 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18.08.2023 முதல் 20.08.2023 வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 18,046 விண்ணப்பங்கள் என மொத்தம் 3,00,880 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இவற்றில் 3ல் ஒரு பங்கு என 1,09,987 விண்ணப்பங்கள் கள சரிபார்ப்பு பணிகளுக்கு அனுப்பட்டுள்ளது. கள சரிபார்ப்பதற்காக 517 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 72. 21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 5ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

    • சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பதரார்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறினால் அவர்களின் தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படும்.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகள், 3 பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை மே மாதம் முதல் ஜூன் வரை நடந்தது.

    சுமார் 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், முதற்கட்ட நகர்வின் முடிவுகள் கடந்த 4ம் தேதி பல்கலை.யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தங்களின் பயனர் ஐடி மற்றம் பாஸ்வேர்ட் பயன்படுத்தி தங்களின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    மேலும், 1,732 விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (7ம் தேதி) பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடி மற்றும் அலைபேசி எண்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், விண்ணப்பதரார்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறினால் அவர்களின் தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படும்.

    இந்த கல்வியாண்டில் கல்லூரி திறக்கப்படும் தேதி, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாக மாணவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 0422-6611346, 94864-25076, 94886-35077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
    • ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 ஜனவரி 1-ந்தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனையொட்டி முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும், முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரி பார்க்க உள்ளனர். இப்பணி வருகிற ஆகஸ்ட் மாதம் 21- ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் மற்றும் 100 சதவீத தூய்மையாகவும் முடிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கலெக்டர் ஷ்ரவன் குமார் கூறியுள்ளார்.

    • நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள சுருக்க முறை திருத்தத்துக்கான முந்தைய திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கின.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.

    திருப்பூர்:

    வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. வரும் நவம்பரில் சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2024 ஜனவரி மாதம் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இது, தேர்தலுக்கான பட்டியலாக அமையும்.

    நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள சுருக்க முறை திருத்தத்துக்கான முந்தைய திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கின. வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கின்றனர்.

    இப்பணியில் ஈடுபட உள்ள 2,513 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர்களால் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பி.எல்.ஓ., ஆப் என்கிற மொபைல் செயலியில் உள்ள ஹவுஸ் டூ ஹவுஸ் என்கிற வசதியை பயன்படுத்தி சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    குறிப்பிட்ட முகவரியில் வாக்காளர் வசிக்கிறாரா, வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படம் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளனவா; இளம் வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெற்றதா என ஆய்வு செய்யப்படும். மேலும், புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது.

    ×