search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பாய் சோரன்"

    • ஏழுமணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
    • ஹேமந்த் சோரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நேற்றிரவு கைது செய்யப்பட்டதும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இது ஒரு பிரேக். வாழ்க்கை ஒரு மிகப்பெரிய போர். ஒவ்வொரு கணமும் நான் போராடினேன். ஒவ்வொரு கணமும் போராடுவேன். ஆனால், சமரசம் செய்ய மண்டியிடமாட்டேன். வெற்றியோ, தோல்வியோ நான் பயப்படமாட்டேன். நான் தோல்வியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் ஹேமந்த் சோரன் கைது.
    • சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். நேற்று இவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஏழு மணி சோதனைக்குப்பின் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக நேற்றிரவு அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது. பொறுப்பு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது.

    ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரும் ராஜினாமா செய்து கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற தலைவராக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியமைக்க உரிமைக்கோரியும் ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

    இதனால் சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    • முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
    • சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் சோரன் கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பாய் சோரன் பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியில் இருந்து வருபவர் சம்பாய் சோரன்.

    தற்போது ஜார்கண்ட் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். சம்பாய் சோரனின் தந்தை சிமல் சோரன் விவசாயி ஆவார். இவர் சரைகேளா கார்சவான் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

    "எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பா.ஜ.க. அரசு மத்திய அமைப்புகளை கொண்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்க நினைக்கிறது. ஆனால், நாங்கள் அதற்கு இடம்கொடுக்க மாட்டோம்," என சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். 

    • அமலாக்கத்துறை காவலில் இருப்பதாக தகவல்.
    • அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ராஜினாமா கடிதம் கொடுக்க ஆளுநர் மாளிகை சென்றதாக தகவல்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பலமணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதனால் புதிய முதல்வராக சம்பாய் தேர்வாக உள்ளார்.

    இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.பி. மஹுவா மஜி "ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் காவலில் (Custody) உள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன்தான் ஹேமந்த் சோர்ன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சென்றார். சாம்பாய் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். எங்களுக்கு போதுமான எண்ணிக்கை உறுப்பினர்கள் உள்ளனர்" என்றார்.

    அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி.
    • இதனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வந்தார். இவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. 10-வது முறையாக சம்மன் அனுப்பி இன்று அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அவரது மனைவியை முதல்வராக்கலாம் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநர் மாளிகை சென்றார். அவருடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.எல்.ஏ.-க்களும் ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

    இதற்கிடையே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் கட்சியும் உறுதி செய்துள்ளது. இந்தநிலையில் சம்பாய் சோரன், தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநரிடம் உரிமைக்கோரியுள்ளார். தனக்கு 43 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதற்கான கடிதத்தையும் வழங்கியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து ஆளுநர் அழைப்புவிடுக்கும் நிலையில் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×