search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதீஸ் ஜார்கிகோளி"

    • கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இல்லை.
    • காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    பெலகாவி :

    கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். குமாரசாமி எங்கள் கட்சிக்கு ஆதரவு தருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகத்தில் கடந்த 2004 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் இரு முறையும் கூட்டணி ஆட்சி பாதியிலேயே கலைந்துபோனது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு கட்சிக்கு எதிராக மற்றொரு கட்சி இருக்கத்தான் செய்யும்.
    • எமகனமரடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பெங்களூரு :

    கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்து வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. இவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் ஆவார். மக்களிடையே மூடநம்பிக்கைகள் குறித்து அவர் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை கூட மயானத்தில் இருந்தே சதீஸ் ஜார்கிகோளி தொடங்கி இருந்தார்.

    சதீஸ் ஜார்கிகோளி, பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். அப்போது ராகு காலம் மற்றும் சூரிய கிரகண நேரத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு தனது மகனுடன் சென்று சதீஸ் ஜார்கிகோளி எமகனமரடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இதுபற்றி சதீஸ் ஜார்கிகோளி நிருபர்களிடம் கூறுகையில், ஒரு கட்சிக்கு எதிராக மற்றொரு கட்சி இருக்கத்தான் செய்யும். இந்த முறை எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறேன் என்பதை மே மாதம் 13-ந் தேதி அனைவரும் தெரிந்து கொள்ளலாம். எனக்கு ஆதரவாக இந்துகள் எத்தனை பேர் ஓட்டுப்போட்டு உள்ளனர் என்பதும் அன்றைய தினம் தெரிந்து விடும், என்றார்.

    ×