என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சங்கமேஸ்வரர்"
- வீட்டில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
- முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுவதுடன் ஸ்ரீசங்கமேஸ்வரையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.
அமாவாசை நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அதிலும், தெற்கு நோக்கிச் செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
அதன் மூலம் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுபோன்ற பித்ரு வழிபாட்டு தினங்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுவதுடன் ஸ்ரீசங்கமேஸ்வரையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.
- சுவாமியை குளிர வைக்கும் விதமாக ஜல அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
- ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
பவானி:
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.
அதேபோல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் அக்னி நட்சத்திரம் முடியும் நாள் வரை சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரான சங்கமேஸ்வரர் மற்றும் கோவில் தெற்கு கோபுரத்தின் பின் பகுதியில் உள்ள சகஸ்ரலிங்கேஸ்வரர் (1008 சிவலிங்கம்) ஆகிய சன்னதியில் உள்ள மூலவர்களுக்கு ஐதீக முறைப்படி தாரா பாத்திரத்தில் பன்னீர், வெற்றி வேர், தண்ணீர் நிரப்பப்பட்டு சாமியின் தலையின் (சிரசு) கீழ் ஒவ்வொரு சொட்டாக விழுந்து சுவாமியை குளிர வைக்கும் விதமாக தாரா பாத்திரம் அபிஷேகம் தினசரி நடைபெறுவது வழக்கம்.
இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி வருகின்ற 29-ந் தேதி முடிவடைய உள்ள நிலையில் அக்னி நட்சத்திர நாட்களான 26 நாட்களும் பவானி சங்கமேஸ்வரர் மற்றும் சகஸ்ர லிங்கேஸ்வரர் சுவாமிகளுக்கு இந்த தாரா பாத்திரத்தின் மூலம் (சிரசு) சுவாமியை குளிர வைக்கும் விதமாக ஜல அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்