search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை வாலிபர் கைது"

    • 2 பேர் உமர் முத்தாரிடம், உனது கடை உரிமையாளர் எங்கே என கேட்டு தகராறு செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    கோவை:

    கோவை போத்தனூர் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்தவர் உமர் முத்தார் (வயது 19). மட்டன் கடை ஊழியர். இவர் நேற்று போத்தனூர் சாரதாமில் ரோட்டில் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் உமர் முத்தாரிடம், உனது கடை உரிமையாளர் எங்கே, அவரை இங்கு வரசொல் என கேட்டு தகராறு செய்தனர்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து உமர் முத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து அவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில் முன்விரோதம் காரணமாக உமர் முத்தாரை தாக்கியது போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த நிஷாம் (31) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    • பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் பிரவீன் (வயது 33) என்பவர் வசித்து வருகிறார்.
    • அடிக்கடி பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டி அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவை ரத்தினபுரியை சேர்ந்த 38 வயது பெண். இவர் சமையல் வேலைக்கு சென்று வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் பிரவீன் (வயது 33) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர், அடிக்கடி பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டி அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த பிரவீன் அந்த பெண்ணிடம் மீண்டும் தகராறு செய்தார். அப்போது அவர் தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண்ணை கீழே தள்ளினார்.

    இது குறித்து அவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×