search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மட்டன் கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
    X

    மட்டன் கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

    • 2 பேர் உமர் முத்தாரிடம், உனது கடை உரிமையாளர் எங்கே என கேட்டு தகராறு செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    கோவை:

    கோவை போத்தனூர் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்தவர் உமர் முத்தார் (வயது 19). மட்டன் கடை ஊழியர். இவர் நேற்று போத்தனூர் சாரதாமில் ரோட்டில் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் உமர் முத்தாரிடம், உனது கடை உரிமையாளர் எங்கே, அவரை இங்கு வரசொல் என கேட்டு தகராறு செய்தனர்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து உமர் முத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து அவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில் முன்விரோதம் காரணமாக உமர் முத்தாரை தாக்கியது போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த நிஷாம் (31) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×