search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை பெண் தற்கொலை"

    கோவையில் கணவர் குடிபோதைக்கு அடிமையானதால் மகனுடன்-பெண் ரெயில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 34). இவர் அந்த பகுதியில் உள்ள வாட்டர் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி குமாரி என்கிற திவ்யா (30). இவர்கள் கடந்த 10 வடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஹென்ட்ரி என்ற மகன் உள்ளார்.

    வேலைக்கு செல்லும் அந்தோணி தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை திவ்யா கண்டித்தார். இதனால் அடிக்கடி கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    மேலும் அந்தோணி சம்பள பணம் முழுவதையும் குடித்து செலவு செய்துவிட்டு குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பது இல்லை. இதனால் திவ்யா குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். தனது கணவரிடம் பலமுறை குடிக்க வேண்டாம் என திவ்யா அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை.

    நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய அந்தோணி குடிபோதையில் வந்தார். இதனால் கணவன்-மணைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த திவ்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது மகனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி ரத்தினபுரி அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு தனது மகனுடன் சென்றார். பின்னர் அந்த வழியாக வந்த ரெயிலில் மகனுடன் பாய்ந்து தற்கெலை செய்து கொண்டார். இதில் 2 பேரும் சம்பவஇடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட திவ்யா, ஹென்ட்ரி ஆகியோரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×