search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோலாகல கொண்டாட்டம்"

    • மகா சிவராத்திரி கொண்டாட்டம் நாளை அதிகாலை வரை நடக்கிறது.
    • 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கி தொடங்கியது. மகா சிவராத்திரி கொண்டாட்டம் நாளை அதிகாலை வரை நடக்கிறது.

    விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

    மேலும், துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ஈஷா யோக மையத்தில் தொடங்கியுள்ள மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். மேலும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா மாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி உள்ளிட்ட வெளிமாநில கவர்னர்களும் பங்கேற்றுள்ளனர்.


    • பழைய பயனற்ற பொருட்களை எரித்தனர்
    • சாலைகள் புகை மண்டலமாக காட்சி அளித்தது

    வேலூர், ஜன.14-

    பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்றனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று போகி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

    வேலூரில் இன்று அதிகாலையிலேயே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த தேவையில்லாத பழைய பொருட்களை எரித்தனர். ஏற்கனவே வேலூரில் கடும் பனி கொட்டிய நிலையில் அதனுடன் புகையும் சேர்ந்து கொண்டதால் மாநகர பகுதியில் புகைமண்டலமாக காட்சி அளித்தது.

    ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை நகரப் பகுதிகளில் அதிகளவில் போகிப் பண்டிகை கொண்டாடினர். கடந்த சில நாட்களாக கடும் பனி கொட்டி வருகிறது.

    இன்று போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சாலைகளில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது.
    • கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஈரோடு:

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.

    கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமசை வரவேற்கும் வகையில் வீட்டின் முன் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை தொங்கவிட்டும், வீட்டுக்குள் குடில்கள் அமைத்தும் இருந்தனர்.

    இது தவிர தேவாலயங்களிலும், வணிக நிறுவனங்களிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்க ப்பட்டு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது.

    பெத்தலேகம் என்ற இடத்தில் மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசுவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் ஆலயத்தில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குடிலில் குழந்தை இயேசுவின் சிலை (சொரூபம்) வைக்கப்பட்டது.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்தில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 5 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் சிறப்பு பிரா ர்த்தனை நடைபெற்றது.

    பிரார்த்தனை முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். உறவினர்கள் நண்பர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை களை கட்டியது.

    • கோவில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம்
    • பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடந்தது

    நாகர்கோவில்:

    கல்வி, விளையாட்டு, தொழில் என எதை தொடங்குவதாக இருந்தாலும், அதற்கு நல்ல நாள் பார்த்து செய்வது வழக்கம். ஆனால் இந்த நாளில் செய்தால், அது மிகுந்த வளர்ச்சி அடையும் என கருதப்படும் நாள் தான் விஜயதசமி.

    ஆயுத பூஜையின் மறுநாள் வரும் விஜயதசமி நாள், கல்வி கற்பவர்களுக்கும் தொழில் தொடங்குபவர்க ளுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். இந்த ஆண்டு இன்று(புதன்கிழமை) விஜய தசமி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    நேற்று ஆயுதபூஜை கொண்டாடிய அனைவரும் பூஜையில் வைத்த தொழில் கருவிகள், புத்தகங்கள் போன்றவற்றை விஜயதசமி நாளான இன்று மீண்டும் பூஜை செய்து எடுத்து பயன்படுத்தினர். விஜயதசமி நாளில் எது செய்தாலும் அது பெருகும் என்பது ஐதீகம்.

    இதனை கருத்தில் கொண்டே பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இன்று தாம்பாளத்தில் வைக்கப்பட்ட அரிசி மற்றும் நெல்லில் எழுத்துக்களை எழுத கற்றுக் கொடுப்பது வழக்கம். வித்யாரம்பம் என கருதப்படும் இந்த நிகழ்ச்சி இன்று கோவில்களிலும் வீடுகளிலும் நடைபெற்றது.

    இது தவிர இன்று பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர். இதனால் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை நாளான இன்று ஒரு ஆசிரியராவது பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்ட கோவில்க ளிலும் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து கோவில்களிலும் செய்ய ப்பட்டு இருந்தன. பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். பார்வதிபுரம் வனமாலீ ஸ்வரர் கோவி லில் அதிக அளவில் குழந்தைகளுடன் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தங்களது குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு, அர்ச்சகர்களை வைத்து வித்யாம்பர நிகழ்ச்சியை நடத்தினர். தாம்பாளத்தில் வைக்கப்பட்ட அரிசி மற்றும் நெல் மணியில் எழுத்துக்களை குழந்தையின் கையைப் பிடித்து எழுத கற்றுக் கொடுத்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதனால் அனைத்து கோவில்களிலும் இன்று காலையிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளிலும் இன்று மாணவர் சேர்க்கை நடந்தது. பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்தனர்.

    திருவிதாங்கோடு மன்னர் மர்தாண்டவர்மா ஆட்சி காலத்தில் பத்மனாபபுரம் அரண்மனையில் சிறிது காலம் அரசவை கவிஞராக இருந்த கம்பர், போகும் போது விட்டு சென்ற சரஸ்வதி விக்கிரகத்தை மன்னர் எடுத்து அரண்மனை வளாகத்தில் கோவில் கட்டி வழிபட்டு வந்தார்.

    அவ்வாறு பிரசித்தி பெற்ற பத்மநாபபுரம் தேவார கெட்டு சரஸ்வதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ம் தேதி நவராத்திரி விழா துவங்கி 10 வது நாளான இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது,

    தேவிக்கு நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு குழந்தை களுக்கு எழுத்தறிவு சொல்லிக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி தொடங்கியது. பேராசிரி யர்கள் சங்கர நாராயணபிள்ளை, அய்யப்பன், ஆசிரியர் ரெகுராமன் ஆகியோர் குழந்தைகளின் நாவில் தங்க குச்சியாலும், தாம்பாள தட்டில் வைக்கப்பட்டி ருந்த தானியத்தில் கைவிரல்களா லும் எழுத்துக்களின் வடிவங்களை எழுதி எழுத்த றிவை சொல்லி கொடுத்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, தேவார கெட்டு சரஸ்வதி அம்மன் கோவில் டிரஸ்ட் தலைவர் பாலன், செயலா ளர் விஜயராகவன், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ×