search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கைகள்"

    • வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் கேட்டு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி வாயிற் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
    • குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட வேண்டும்,

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு பேரணி மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன முழக்க வாயிற்கூட்டம் நடத்தினர்.

    வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் கேட்டு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட தலைநகரங்களில் பேரணி வாயிற் கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன வாயிற் கூட்டம் நடத்தினர்.

    மாவட்டத் தலைவர் சிவபழனி பேரணியை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கிய பேரணியானது நகரின் முக்கிய விதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கண்டன வாயிற் கூட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

    • குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ. 1000 அலவன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று கிராம ஊராட்சி ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை (காவலர்) பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    உள்ளாட்சி சங்க மாநிலக்குழு நிர்வாகி நல்மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கவேல்பாண்டியன், துணை தலைவர் ஆஞ்சி, பொதுச்செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அரவிந்தன், மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் கவுரி, துணை செயலாளர்கள் பொன்ராஜ், காளிராஜன் மற்றும் மணவாளன், ஆண்டவர், சேதுராமு, பூமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஊராட்சி ஊழியர்களான ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடை, ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு ரூ.1,400 ஊதிய உயர்வு அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.

    7-வது ஊதியக்குழு நிலுவை ஊதியம் 55 மாதங்களாகியும் வழங்கப்படவில்லை. அதை உடனே வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும்.

    தூய்மை காவலர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 600 ஊதியத்தை உயர்த்தி, ஊராட்சிகள் மூலமாக நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ. 1000 அலவன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

    ×