search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைகால நடைமுறைகள்"

    • வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் இருக்கின்றன.
    • உடலின் வெப்ப நிலையை பராமரித்து காப்பவை வியர்வை சுரப்பிகள்.

    வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் இருக்கின்றன. உதடு, வெளிக்காது, நகத்தின் அடிப்பகுதி, ஆண்கள்- பெண்களின் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் மட்டும் தான் வியர்வை சுரப்பிகள் இல்லை. உடலின் வெப்ப நிலையை பராமரித்து காப்பவை வியர்வைச் சுரப்பிகள்.

    தட்பவெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது. அதிக வியர்வை வரும் வேலைகளை செய்வது. இறுக்கமான ஆடைகளை அணிவது. காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அதிக நேரம் இருப்பது போன்றவை வியர்க்குருவை உண்டாக்கும் சில காரணங்களாகும்.

    1) இளநீர், தர்ப்பூசணி, வெள்ள ரிக்காய், கிர்ணிப்பழம், பனை நுங்கு போன்ற பழங்களை அதிகமாக சாப்பிட லாம்.

    2) வேப்பிலை, சந்தனம், மஞ்சள் இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்களில் தேய்த்து, சுமார் ஒரு மணி நேரம் ஊற விட்டு பின்பு குளிக்கலாம். இதுபோல சந்த னத்தை உடலெங்கும் தேய்த்துக்கொள்ளலாம். கற்றாழைச் சாறு தடவினால் நல்ல பலன் கிடைக்கும். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வைத்துக் கொண்டு வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் தடவினால் எரிச்சல், அரிப்பு குறைந்துவிடும்.

    3) வெயில் காலத்தில் வழக்கமாக குடிப்பதைவிட சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

    4) முடிந்தவரை வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்தவும். காற்றோட்டமான இடத்தில் இருக்கப் பழகுங்கள்.

    4.கற்றாழை ஜெல் அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வு தருகிறது. சரும பிரச்சனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வியர்குருவிற்கும் சிறந்ததாக விளங்குகிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்த பின்னர் நன்றாக குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் கண்டிப்பாக இந்த வியர்க்குரு போன்ற பிரச்சனை உடனடியாக நீங்கும்.

     5. வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி தான். இந்த ஐஸ் கட்டிகளை வியர்க்குரு உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

    6. சந்தன பவுடரை பன்னிருடன் கலந்து வியர்க்குரு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும். நன்றாக தடவிய பிறகு சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் வியர்க்குரு தொல்லை அறவே இருக்காது.

    7. வியர்க்குருவை தடுக்க வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அரைத்து வைத்த வெள்ளரிக்காய் விழுதை வியர்க்குரு உள்ள இடங்களில் 2 அல்லது 3 மணிநேரம் தடவி நன்றாக காயவைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு நீங்கி விடும்.

    ×