search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை கும்பல்"

    • பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
    • 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.

    சூலூர், ஜூன்.5-

    சூலூர் போலீசார் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி வந்த கும்பலை சேர்ந்த மருதாசலம் (வயது 36), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (37), கோவில்பாளையம் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்கிற நட்டூரான் (51) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. .இந்த சிறப்பு படையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் , ஏட்டு மகாராஜன் உளவுப்பிரிவு போலீஸ் சந்துரு மற்றும் போலீசார் முத்துக்கருப்பன், செல்லப்பாண்டி, பழனி குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

    கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற அனைத்து திருட்டு வழக்குகளிலும் கொள்ளையர்களை பிடித்து அவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை சூலூர் போலீசார் மீட்டனர்.

    இதையடுத்து போலீசாரை கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி நேரில் சென்று பாராட்டி, பரிசு வழங்கினார். பின்னர் போலீசாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    ×