search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கொள்ளை கும்பலை பிடித்த போலீசாரை நேரில் பாராட்டிய டி.ஐ.ஜி
    X

    கோவையில் கொள்ளை கும்பலை பிடித்த போலீசாரை நேரில் பாராட்டிய டி.ஐ.ஜி

    • பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
    • 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.

    சூலூர், ஜூன்.5-

    சூலூர் போலீசார் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி வந்த கும்பலை சேர்ந்த மருதாசலம் (வயது 36), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (37), கோவில்பாளையம் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்கிற நட்டூரான் (51) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. .இந்த சிறப்பு படையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் , ஏட்டு மகாராஜன் உளவுப்பிரிவு போலீஸ் சந்துரு மற்றும் போலீசார் முத்துக்கருப்பன், செல்லப்பாண்டி, பழனி குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

    கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற அனைத்து திருட்டு வழக்குகளிலும் கொள்ளையர்களை பிடித்து அவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை சூலூர் போலீசார் மீட்டனர்.

    இதையடுத்து போலீசாரை கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி நேரில் சென்று பாராட்டி, பரிசு வழங்கினார். பின்னர் போலீசாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    Next Story
    ×