search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிவேரி தடுப்பணை"

    • சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
    • இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது.

    பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கொடிவேரி தடுப்பணை வழியாக ஆர்பரித்து கொட்டி செல்லும். இதனால் கொடிவேரி தடுப்பு அணையில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரை ரசிப்பதற்கும், குளிப்பதற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக அருகே உள்ள பகுதிகளான திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இதனால் இந்த தடுப்பணைக்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருவார்கள். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கடும் வெயிலின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 1 மாதத்துக்கும் மேலாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் கடந்த 1 மாதத்துக்கு முன்பு 80 அடிக்கு மேல் நீர் இருந்தது. அது படிப்படிாக குறைந்து தற்போது 47 கன அடி மட்டுமே உள்ளது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக 100 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்தது. இதன் காரணமாக கொடிவேரி தடுப்பணைக்கும் நீர் வரத்தும் குறைந்தது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீர் இல்லாமல் வரண்டு பாறைகளாக காட்சி அளித்து வருகிறது.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கொடிவேரி அணைக்கு வந்திருந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து தடுப்பணைக்கு சென்ற மக்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாறைகளாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர். ஒரு சிலர் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.

    • கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • கொடிவேரி தடுப்பணை பகுதியில் மழை தண்ணீர் இரு கரைகளிலும் பெருக்கெடுத்து செல்கிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.

    கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதே போல் நேற்று இரவு கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், கொடிவேரி மற்றும் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பவானி ஆற்றில் மழை வெள்ளம் இரு கரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து செல்கிறது.

    மேலும் கொடிவேரி தடுப்பணை பகுதியில் மழை தண்ணீர் இரு கரைகளிலும் பெருக்கெடுத்து செல்கிறது. தடுப்பணையில் உபரி நீர் சுமார் 2400 கனஅடி செல்கிறது. மேலும் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதையொட்டி கொடிவேரியில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் அனுமதி இல்லை. மேலும் அங்கு பரிசல்கள் இயக்கவும் இன்று தடை விதிக்கப்படுவதாகவும் தண்ணீர் குறைந்த பின்பு அனுமதி அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரிக்கு பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். உள்ளே செல்லும் கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர்.

    • ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • மே தின விடுமுறை என்பதால் கூட்டம் காலையில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது.

    கோபி:

    தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல்காற்று வீசி வருவதால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக நீர்நிலைகள் மற்றும் குளுகுளு பிரதேசங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் கார், பஸ், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரிக்கு வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக கொடிவேரி பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் சுமார் 17 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.

    அருவியில் கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்துச் சென்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் நுழைவு கட்டணமாக ரூ.85 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    இதன் காரணமாக கடுமையான கூட்டம் அலைமோதியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று மே தின விடுமுறை என்பதால் கூட்டம் காலையில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுடச்சுட மீன்களையும் வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

    பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டே இருந்தது.

    • நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது இதனால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்தது. இதை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் தினமும் வந்து செல்கிறார்கள். தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    தொடர்ந்து அவர்கள் அணை பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சாப்பிட்டு செல்வார்கள். இதற்காகவே தினமும் ஏராளமானமக்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கோபி செட்டிபாளையம், நம்பியூர், கொடிவேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதே போல் நேற்று இரவும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்ப ணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், மழை ெபய்து வருவதாலும் கொடுவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணை நிரம்பி தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதையடுத்து அணையில் 1700 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

    கொடிவேரி தடுப்பணையில் அதினளவு தண்ணீர் செல்வதால் அணையில் குளிப்பதற்கும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் தடை விதித்து பொதுப்பணித்துறை அதி காரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்க ப்பட்டு இருந்தது. இதை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

    ×