search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodiveri barrage"

    • சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
    • இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது.

    பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கொடிவேரி தடுப்பணை வழியாக ஆர்பரித்து கொட்டி செல்லும். இதனால் கொடிவேரி தடுப்பு அணையில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரை ரசிப்பதற்கும், குளிப்பதற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக அருகே உள்ள பகுதிகளான திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இதனால் இந்த தடுப்பணைக்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருவார்கள். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கடும் வெயிலின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 1 மாதத்துக்கும் மேலாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் கடந்த 1 மாதத்துக்கு முன்பு 80 அடிக்கு மேல் நீர் இருந்தது. அது படிப்படிாக குறைந்து தற்போது 47 கன அடி மட்டுமே உள்ளது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக 100 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்தது. இதன் காரணமாக கொடிவேரி தடுப்பணைக்கும் நீர் வரத்தும் குறைந்தது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீர் இல்லாமல் வரண்டு பாறைகளாக காட்சி அளித்து வருகிறது.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கொடிவேரி அணைக்கு வந்திருந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து தடுப்பணைக்கு சென்ற மக்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாறைகளாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர். ஒரு சிலர் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
    • அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விழா, விசேஷம் மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசுகிறது.

    வெயிலின் வெப்பத்தில் இந்து தப்பிக்க பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா தலங்களிலும் குவிந்து வருகிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலாபயணிகள் பலர் தங்கள் குடும்ப த்தினருடன் வந்தி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    காலை பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து குடும்ப த்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை அந்த பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதே போல் பவானிசாகர் அணை பூங்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் வந்திருந்தனர்.

    அவர்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் பலர் வந்திருந்தனர். பவானிசாகர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    காலை பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணையின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர்.

    • கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு அனுமதி
    • கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர்

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் நீர்ப்பிடிப்பு பகுதி களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையொட்டி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்கவும், ரசிப்பதற்கும் தடை் விதிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து குைறந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. தடுப்ப ணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் கடந்த 5 நாட்களுக்கு பிறகு கொடி வேரி தடுப்பணையில் இன்று முதல் பொதுமக்க ளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு உள்ளது.

    இதையொட்டி இன்று காலை கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர். தொடர்ந்து அவர்கள் அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர்.
    • இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் தினமும் வந்து செல்கிறார்கள்.

    தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். தொடர்ந்து அவர்கள் அணை பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சாப்பிட்டு செல்வார்கள். மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளி களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர். தொடர்ந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் தடுப்பணையில் கொட்டும் தண்ணீ ரில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை குடும்பத்துடன் சாப்பிட்டனர். மேலும் பலர் தடப்பணையின் வெளியில் விற்கப்படும் மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.

    இதேபோல் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பூங்காவுக்கு வந்த சிறுவர்- சிறுமிகள் ஊஞ்சல் விளை யாடினர். மேலும் பெண்கள், ஆண்கள் என பலர் பூங்கா வில் விளை யாடி மகிழ்ந்த னர். இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காண ப்பட்டது.

    ×