search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த  சுற்றுலா பயணிகள்
    X

    கோப்புப்படம்.

    கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

    • கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
    • அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விழா, விசேஷம் மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசுகிறது.

    வெயிலின் வெப்பத்தில் இந்து தப்பிக்க பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா தலங்களிலும் குவிந்து வருகிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலாபயணிகள் பலர் தங்கள் குடும்ப த்தினருடன் வந்தி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    காலை பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து குடும்ப த்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை அந்த பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதே போல் பவானிசாகர் அணை பூங்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் வந்திருந்தனர்.

    அவர்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர்.

    Next Story
    ×