search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bathing allowed at"

    • கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு அனுமதி
    • கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர்

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் நீர்ப்பிடிப்பு பகுதி களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையொட்டி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்கவும், ரசிப்பதற்கும் தடை் விதிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து குைறந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. தடுப்ப ணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் கடந்த 5 நாட்களுக்கு பிறகு கொடி வேரி தடுப்பணையில் இன்று முதல் பொதுமக்க ளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு உள்ளது.

    இதையொட்டி இன்று காலை கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர். தொடர்ந்து அவர்கள் அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    ×