search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists enjoying"

    • விடுமுறை தினமான இன்று கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்தனர்.
    • அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.

    இந்த கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்ப ணைக்கு வந்து செல்கிறார்கள்.

    மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்க ளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடு ம்பத்து டன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். நேற்று சனிக்கிழமை பொது மக்கள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதே போல் விடுமுறை தினமான இன்று ஞாயிற்று க்கிழமை கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இன்று ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்த னர்.

    இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர்.

    இதே போல் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகருக்கு இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பொது மக்கள் பலர் வந்திருந்தனர். இைத தொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளை யாடி மகிழ்ந்தனர்.

    மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குது களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளை யாடி இயற்கையை ரசித்து சென்றனர்.

    இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர். இதனால் இன்று பொதுமக்க ளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • எந்த நேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
    • இந்த பகுதி எப்போதும் பச்சை பசேலென காட்சி அளிக்கும்

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 33 குக்கிராமங்கள் உள்ளன. இதில் தாமரைக்கரை மிகவும் உயரமான பகுதியாக இருந்து வருகிறது.

    அந்தியூர், பர்கூர் வழி யாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லும் பிர தான சாலை அமைந்து உள்ளது. இந்த வழியாக செல்வதால் மைசூருக்கு விரைவில் செல்ல முடியும் என்பதால் பெரும்பாலான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகிறது. மேலும் லாரி, டெம்போ என சரக்கு வாகன ஓட்டிகள் அதிகள வில் இந்த வழியை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் எந்த நேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    மேலும் பர்கூர் மலை ப்பகுதியில் தாமரைக்கரை, தட்டக்கரை உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் இந்த பகுதி எப்போதும் பச்சை பசே லென காட்சி அளிக்கும் வகையில் இருந்து வருகிறது.

    மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் விவசாய பொருட்களை விவசாயிகள் அந்தியூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதிகளில் வெயில் காலங்க ளிலும் குளிர்ந்த காற்றுவீசு கிறது. இதனால் தற்போது இந்த பகுதிக்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறா ர்கள். இதனால் இந்தப் பகுதிகளில் அதிக அளவில் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன.

    ஊட்டி, ஏற்காடு, கொடை க்கானல் உள்ளிட்ட பகுதி களுக்கு செல்ல முடியா தவர்கள் ஈரோடு மாவட்ட த்தில் பல்வேறு பகுதி களிலிருந்தும் பர்கூர் மலைப்பகுதிக்கு வந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இங்கு வந்து தங்கி இயற்கை அழகு கொஞ்சும் மலைப் பகுதியை ரசிக்க ஏராளமா னோர் வந்து செல்கின்றார்கள்.

    இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து மலைகளில் உள்ள மரங்கள் வாடி இலைகள் உதிர்ந்து காணப்பட்டது. தற்போது அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    இதையடுத்து பர்கூர், தாமரைக்கரை, தட்டக்கரை மலைப்பகுதிகள் மேலும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் மலைப்பாதையின் முன் பகுதியில் சுற்றுலா பயணி கள் செல்பி எடுத்து செல்கி றார்கள்.

    மேலும் இந்த மலைப்பகுதி வழியாக கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மலை யின் அழகை கண்டு வாகனங்களை ஓரமாக நிறுத்தி இந்த ரசித்த ப்படியே செல்கிறார்கள். இதனால் இந்த மலையின் அழகை ரசிப்பதற்காகவே தினமும் பலர் இந்த வழியாக வருகிறார்கள்.

    மலைப்பாதை வழியாக செல்லும்போது சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி வரட்டு பள்ளம் அணையின் முழு தோற்றத்தையும், அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளையும் காண முடிவதால் பர்கூர் வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் அணையின் தோற்றத்தையும் ரசித்து செல்கின்றார்கள்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
    • அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விழா, விசேஷம் மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசுகிறது.

    வெயிலின் வெப்பத்தில் இந்து தப்பிக்க பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா தலங்களிலும் குவிந்து வருகிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலாபயணிகள் பலர் தங்கள் குடும்ப த்தினருடன் வந்தி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    காலை பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து குடும்ப த்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை அந்த பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதே போல் பவானிசாகர் அணை பூங்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் வந்திருந்தனர்.

    அவர்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர்.

    ×