search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொசு பிடிக்கும்"

    • எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன முறையில் கொசுவலை பிடித்துக் கொண்டு கொசு பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன முறையில் கொசுவலை பிடித்துக் கொண்டு கொசு பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை சார்பில் இருபுறமும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. அப்போது எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள சாக்கடை கால்வாய் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டதால் மழைக்காலங்களில் மழைநீர், சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் இங்குள்ள கடைகள், அரசு அலுவலகங்கள் முன்பு குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதால் தற்போது கொசு பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், முன்னால் ஒன்றிய செயலாளர் பி.சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ஈஸ்வரன், கிட்டுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×