search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது."

    • ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மின்னல் நாகராஜ் குடிபோதையில் வந்து தகராறு செய்தார்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் மின்னல் நாகராஜ் (வயது 53). இவர் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மின்னல் நாகராஜ் குடிபோதையில் வந்து தகராறு செய்தார். இது குறித்து கோர்ட் வரவேற்பு அதிகாரி ரங்கநாதன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

    உடனடியாக போலீசார் கோர்ட்டுக்கு விரைந்து சென்று மின்னல் நாகராஜை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர். 

    • மதில் சுவா் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.
    • பெண்ணை தகாத வாா்த்தையால் திட்டியுள்ளாா்.

    அரியலூா் :

    ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாரதிதாசன் மனைவி ஜெயந்தி (44). இவரது வீட்டின் அருகாமையில் வசிப்பவா் பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா (44). இவா்களிடையே இடப் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ,

    ஆத்திரமடைந்த ராஜா ஜெயந்தியை தகாத வாா்த்தையால் திட்டியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், ராஜாவை கைது செய்தனா்.


    ×