search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதான கணவர்"

    • படுக்கை அறை காட்சிகள் வீடியோவில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.
    • என்னிடம் கேள்வி கேட்டால் அந்த காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் ராஜன் நகரை சேர்ந்தவர் லிவ்விங்ஸ்டன் ஜெயபால் (வயது 30). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பொம்மம்பட்டியை சேர்ந்த அபிதா (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    லிவ்விங்ஸ்டன் ஜெயபால் தான் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று திருமணத்தின் போது கூறியதால் அவருக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.20 பவுன் நகையை பெண் வீட்டார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் லிவ்விங் ஸ்டன் ஜெயபால் மத்திய அரசு அதிகாரி இல்லை என தெரிய வந்தது. இது பற்றி அபிதா கணவரிடம் கேட்டார்.

    அப்போது லிவ்விங்ஸ்டன் ஜெயபால் நாம் 2 பேர் ஒன்றாக இருந்த படுக்கை அறை காட்சிகள் வீடியோவில் பதிவு செய்து வைத்து உள்ளேன். அதை ஏற்கனவே 2 பேர் பார்த்து உள்ளார்கள்.

    என்னிடம் கேள்வி கேட்டால் அந்த காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    மேலும் லிவ்விங்ஸ்டன் ஜெயபாலின் தாயார் ஜெயா (52), தந்தை செல்ல பாண்டி (55), அக்கா கிறிஸ்டி ஞானசெல்வி (35), தங்கை கிரேட்டர் எஸ்தா ஆகிய 4 பேரும் அபிதாவை வரதட் சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் அபிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லிவ்விங்ஸ்டன் ஜெயபாலை கைது செய்த னர்.

    தொடர்ந்து அவரை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் போலீ சார் அடைத்தனர்.

    மேலும் ஜெயா (52), செல்ல பாண்டி (55), கிறிஸ்டி ஞானசெல்வி (35), கிரேட்டர் எஸ்தா ஆகிய 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • சரிதா, அவரது மகன் பவன் கிருத்திக் ஆகியோர் ஒரே சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் சரிதாவின் கணவர் செல்வராஜை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி நேரு நகர் ரேசன் கடை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரிதா (29).

    இவர்களுக்கு கடந்த  4ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களின் மகன் பவன் கிருத்திக் (3).கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரிதா மற்றும் அவரது மகன் பவன் கிருத்திக் ஆகியோர் ஒரே சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இது குறித்து சரிதாவின் தாயார் ஜெயா பு.புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து போலீசார் சரிதாவின் கணவர் செல்வராஜை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப் பட்டார்.

    ×