search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிஷீல்டு தடுப்பூசி"

    • செவிலியர்களுக்கான பணியிட மாற்றம், கலந்தாய்வில் நீண்ட நாட்களாக குழப்பம் நிலவியது.
    • 2400-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் எம்.ஆர்.பி. மூலம் வெளிப்படை தன்மையுடன் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    சென்னை:

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க நிர்வாகிகள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

    தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் முதலமைச்சர் மா.சுப்பிரமணியன், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செவிலியர்களுக்கு செய்துள்ள சாதனைகளை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:-

    1912 தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள். மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரத்து 969 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை படிப்படியாக உயர்த்தி ரூ.5,500 ஆக வழங்கப்படுகிறது.

    செவிலியர்களுக்கான பணியிட மாற்றம், கலந்தாய்வில் நீண்ட நாட்களாக குழப்பம் நிலவியது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 9 ஆயிரத்து 535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் பெற்றுள்ளார்கள்.

    2400-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் எம்.ஆர்.பி. மூலம் வெளிப்படை தன்மையுடன் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    செவிலியர் சங்கத்தினர் சிறந்த செவிலியர்களை தேர்வு செய்து விருது வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்டவுடன் தேர்வு செய்யப்பட்ட 19 செவிலியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்குவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேட்டில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு ஏதேனும் உண்டா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    ரத்தம் உறைதல் ஏற்பட்ட மாதிரி எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக புகார் ஏதும் இல்லை. பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்குதான் எந்த பாதிப்புமே வரும். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் உடற் பயிற்சி, உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    • இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது.
    • இந்த மருந்தை இந்தியாவில் அனுமதித்ததற்காக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் சாடி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    உலகையே உலுக்கிய கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முக்கியமானது. இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது.

    இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வினியோகம் செய்தது.

    இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் போட்டுக்கொண்டனர்.

    இந்த கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்து உள்ளது. அதாவது அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் மற்றும் அது தொடர்பான விளைவுகளை உருவாக்கும் என இங்கிலாந்து கோர்ட்டில் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.

    இது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

    இந்த மருந்தை இந்தியாவில் அனுமதித்ததற்காக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் சாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டை எட்டியுள்ளது. இது தொடர்பாக விஷால் திவாரி என்ற வக்கீல் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

    அதில் அவர், கோவிஷீல்டு தடுப்பூசியை பரிசோதிக்கவும், அதன் பக்க விளைவுகள் மற்றும் அபாய காரணிகளை ஆய்வு செய்யவும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    மேலும் எந்த தனிநபரும் அல்லது நிறுவனமும் இந்த தடுப்பூசி விற்பனை மற்றும் வினியோகம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    இதைப்போல இந்த தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

    அனைத்து தரப்பினரிடமும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

    ×