search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுகுடிநீர்"

    • புதிய மின்மோட்டார் அமைக்கும் பணி மற்றும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
    • பணி முடிவடையும் போது அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும்.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவில் நகராட்சியில் ரூ.62.29 கோடி மதிப்பீட்டில் முத்தூர்– காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய மின் மோட்டார் அமைத்து குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணியினை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்த தாவது:-

    வெள்ளகோவில் நகராட்சி, சின்னக்கரை ஸ்ரீமுருகன் திருமண மண்டபம் அருகில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முத்தூர் –காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.62.29 கோடி மதிப்பீட்டில் புதிய மின்மோட்டார் அமைக்கும் பணி மற்றும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

    முத்தூர் காங்கேயம் கூட்டுக்குடிநீர் திட்டமானது திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள், 1790 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 86 கிராம ஊராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டமாகும். 1998-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் உள்ள கான்கிரீட் குழாய்கள் 25 வருடங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வடிவமைக்கப்பட்ட குடிநீர் வழங்க இயலவில்லை. அதன் பொருட்டு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்குதல் துறையின் மூலமாக ரூ. 62.29 கோடியில் அனுமதி அளிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணியானது 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பணி முடிவடையும் போது அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும் என்றார்.

    அதனைத்தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சி, சின்னக்கரை ஸ்ரீ முருகன் திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முத்தூர் – காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இத்திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் தலைமைப்பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) செல்லமுத்து, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் கண்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் கனியரசி முத்துக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

    • அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
    • அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சிஒன்றியத்திற்கு உட்பட்ட நகரிக்காத்தான், நம்புதாளை மற்றும் பாண்டு குடி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புறங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என அறிந்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேன்மை அடைந்திடும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல் படுத்தி வருகிறார்.

    குடிநீர், போக்குவரத்து, மின் விநியோகம், நீர்ப்பாசனம், சாலைவசதி ஆகியவைகள் எந்த தடையுமின்றி மக்களுக்கு கிடைக்க தேவையான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.

    தமிழ்நாடுகுடிநீர்வடிகால் வாரியம் மூலம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நக ராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சிஒன்றியங்களில் உள்ள 2,306 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.2819.78 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    இதன் மூலம் அனைத்துகிராமத்திற்கும் தண்ணீர் தடையின்றி கிடைக்கும். இந்ததிட்டத்தின் மூலம் அனைத்து கிராமத்திற்கும் குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது தண்ணீர் சீராக கிடைக்கப்பெறாமல் உள்ள பகுதிகளை கண்டறிந்து லாரிகளில் தண்ணீரை கொண்டு சென்று குடிநீர் விநியோகம் செய்ய தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வைத்திடும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், திருவாடானை ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் முகம்மதுமுக்தார், வட்டாரவளர்ச்சிஅலுவலர் ராஜேசுவரி, திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன், உதவிபொறியாளர்கள் செல்வக்குமார், பாலகுமார், வேதவள்ளி, ஜெயந்தி மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×